districts

img

காவிரியில் உரிய நீரை பெற்றுத் தர வேண்டும்

தஞ்சாவூர், ஜூலை.25 -

       தண்ணீர் இன்றி கருகும் குறுவை பயிரை காப்பாற்ற, காவிரியில் தமிழ் நாட்டின் உரிமையை நிலைநாட்டி உரிய நீரை பெற்றுக் கொடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேக தாதுவில் அணை கட்டும் முயற்சி களை கைவிட வேண்டும். நீதிமன்றம்,  காவிரி ஆணைய தீர்ப்புகளின்படி உரிய நீரை வழங்க வேண்டும். இதில் தமிழக அரசு அரசியல் மற்றும் சட்ட ரீதியான அழுத்தம் கொடுத்து நடவ டிக்கை எடுக்க வேண்டுமென வலியு றுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  சார்பில் செவ்வாயன்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க  தஞ்சை ஒன்றியச் செயலாளர் எஸ். கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் கண்டன  உரையாற்றினார். பட்டுக்கோட்டை யில் விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி எம்.செல்வம் தலைமை வகித் தார். கும்பகோணம் காந்தி பூங்கா அரு கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.

      விவ சாயத் தொழிலாளர் சங்க மாநிலக் குழு  உறுப்பினர் நாகராஜன் உள்ளிட்ட பலர்  உரையாற்றினர்.

திருவாரூர்

     திருவாரூர் பழைய ரயில் நிலையம்  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றி யச் செயலாளர் ஜி.பவுன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் எம்.சேகர் உரையாற்றினார்.  கொரடாச்சேரி வெட்டாற்று பாலம்  அருகே ஒன்றியச் செயலாளர் கே. செந்தில் தலைமை வகித்தார், மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி கண்டன உரையாற்றினார்.

குடவாசல்

     வி.பி.சிந்தன் பேருந்து நிலையம் எதிரே, சங்கத்தின் குடவாசல் தெற்கு பகுதி ஒன்றியச் செயலாளர் எஸ்.கிருஷ்வநாதன், நகரச் செயலாளர் டி.ஏ.சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைச் செய லாளர் தியாகுரஜினிகாந்த் உரையாற் றினார்.

     குடவாசல் வடக்கு ஒன்றியம் எரவாஞ சேரி கடைவீதியில் அமைப்பின் ஒன்றியச் செயலாளர் வி.ராஜாதுரை தலைமையிலும், வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடி கடைவீதியில் விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச்  செயலாளர் எஸ்.இளங்கோவன் தலை மையிலும் நடைபெற்றது. துணைச் செயலாளர் கே.சுப்ரமணியன் உரை யாற்றினார்.

    நீடாமங்கலம் பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு அமைப்பின் ஒன்றியச் செய லாளர் வி.பூசானந்தம் தலைமை வகித் தார். மாநிலக்குழு உறுப்பினர் வி.எஸ். கலியபெருமாள் உரையாற்றினார். திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலா ளர் எம்.ஜெயபிரகாஷ் தலைமை வகித் தார். மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் கண்டன உரையாற்றினார்.

 மயிலாடுதுறை

     மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் இயற்கை விவசாயி அ.இராமலிங்கம் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்

    நாகப்பட்டினம் மாவட்டம் வேதா ரண்யம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க நாகை மாவட்டச் செயலாளர் கோவை.சுப்பிர மணியன் தலைமையிலும், தலை ஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம்  எதிரே சங்கத்தின் ஒன்றியச் செயலா ளர் தனபால் தலைமையிலும் நடைபெற் றது. சங்க மாவட்டத் தலைவர் அம்பி காபதி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராஜா உள்ளிட்டோர் உரையாற்றினர்.