குழித்துறை, ஜூன் 9
கன்னியாகுமாரி மாவட் டத்தில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனத்தில் கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்துவது தொடர்ந்து நடை பெற்று வருகிறது. இதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் கடத்தல் தடுப்பு தனிப் பிரிவு அமைத்து கண்காணித்து வருகின்றன. இருந்தும் கனிம வளங்கள் தொடர்ந்து கேரளாவுக்கு கொண்டு செல்லப்படு கின்றன. வெள்ளியன்று கனிம வளங்கள் கேரளா வுக்கு வேகமாக கொண்டு சென்ற டாரஸ் லாரி படந்தாலு மூடு பகுதியில் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
நல்வாய்ப்பாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு களி யக்காவிளை காவல்துறை வந்தபோது ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து களியக்காவிளை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.