districts

ஏரி, குளங்களை கோடையிலேயே தூர்வார வேண்டுகோள்

திருச்சிராப்பள்ளி, ஏப்.22-

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி புறநகர் மாவட்ட  நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமையன்று வெண்மணி இல்லத் தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு புறநகர் மாவட்டத் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் நடராஜன்  சிறப்புரையாற்றினார். மாவட்ட பொருளாளர் ராமநாதன் நன்றி கூறினார். மாவட்ட துணைத் தலைவர் பாலமுருகன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேகர், குருநாதன், துணைத்  தலைவர்கள் சீனிவாசன், முருகேசன் உள்பட பலர் கலந்து  கொண்டனர்.  

     கூட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களை யும், உய்யக்கொண்டான், கட்டளை கால்வாய், அய்யன் வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால் ஆகியவற்றை கோடை  காலத்திலேயே உடனடியாக தூர்வார வேண்டும். காவிரி - குண்டாறு திட்டத்தை துரிதப்படுத்தி திருவெறும்பூர் மற்றும் மணப்பாறை பகுதிகளுக்கும் பாசனம் கிடைக்குமாறு திட்டமிட வேண்டும், திருச்சி மாவட்டத்தில் வாழை சார்ந்த பொருட்களை பதப்படுத்தும் தொழிற்சாலை, பூ பதப்படுத் தும் தொழிற்சாலை மற்றும் சென்ட் தயாரிக்கும் தொழிற் சாலை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.