districts

ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரியில் முப்பெரும் விழா

திருவாரூர், ஏப்.18-

  திருவாரூர் மாவட்டம்,பேரளம் அருகே உள்ள  கொல்லுமாங்குடியில் உள்ள ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயம் முடித்த முன்னாள்  மாணவர்களுக்கு பட்டயம் வழங்குதல், விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கு தல், வளாக நேர்காணலில் தேர்வு பெற்ற  மாணவர்களுக்கு பணியமர்வு ஆணை  வழங்குதல் என முப்பெரும் விழா நடை பெற்றது.

  நிகழ்விற்கு கல்லூரி சேர்மன் ரவி  தலைமை  வகித்தார். துணை முதல்வர்  சுமதி வரவேற்றார். முதல்வர் துவக்க வுரையாற்றினர். மாவட்டக் கல்வி அலு வலர்  இ.முருகன் சிறப்புரையாற்றினார்.

  தாளாளர் தேவகி, இயக்குநர்கள் காவ்யபிரியா, மதுமதி ஆகியோர் மாண வர்களை வாழ்த்தி பட்டயங்கள் வழங்கி னர். விளையாட்டுப் போட்டியில் பரிசு  பெற்ற மாணவர்களுக்கு துணைச் சேர்மன் ராக்கஷ் தினேஷ், வேலை வாய்ப்பு அலுவலர் சரவணன் ஆகி யோர் பரிசுகள் வழங்கினர்.

  மேலாளர் சரவணன் உடற்கல்வி  இயக்குநர் ஜீவானந்தம் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும், அலுவலக பணியாளர்கள் பங்கேற்ற னர்.நிறைவாக அடிப்படை பொறியியல் துறைத்தலைவர் கந்தன் நன்றி கூறினார்