districts

img

இயற்கைப் பேரிடர் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைக்க 584 நிவாரண மையங்கள் தயார்

தஞ்சாவூர், மே.30 -  தென்மேற்கு பருவமழை - 2024 தொடர்பாக,  அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணை ப்பு குழுக்கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் வியாழக்கிழமை நடை பெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பேசியதாவது: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள்,  வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகிய வற்றில்  24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக் கப்பட்டு,  அதில் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்க ளுடன் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமித்து மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை கண்காணித்திட வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய கிராமங்களை மிக அதிக அளவில் பாதிக்கக்கூடிய கிராமங்கள் 3, அதிக அளவில் பாதிக்கக்கூடிய கிராமங்கள் 50,  மிதமாக பாதிக்கக்கூடிய கிராமங் கள் 50 மற்றும் குறைவாக பாதிக்கக்கூடிய கிராமங் கள் 92 ஆகக் கூடுதல் 195 கிராமங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் 4,500 முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு பேரிடர் காலங்களில் அரசுத்துறையினருடன் இணை ந்து பணியாற்றுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.  கால்நடைகளை பாதுகாப்பதற்கு 529 முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு  பராமரிப்பதற்கு ஏதுவாக தயார் நிலையில் உள்ளது. பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொது மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளுடன் பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை தங்க வைப்பதற்கு 14 பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள் உட்பட 195 நிவாரண மையங்க ளும், இதர பகுதிகளில் 389 நிவாரண மையங்களும் ஆக மொத்தம் 584 நிவாரண மையங்கள் தயார்ப் படுத்தப்பட்டுள்ளன.  பேரிடர்களின்போது நிவாரண முகாம்களில் பயன்படுத்திட ஏதுவாக போதுமான அளவு உணவு தானியங்கள், ரொட்டி, மருந்துகள், குழந்தை களுக்கான உணவு, பால் மற்றும் பால் பவுடர்கள் ஆகியவற்றை தயார்நிலையில் உள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில், தென்மேற்கு பருவமழை யின் போது வெள்ள நீர் தேங்காதவாறு 6,087 சிறு பாலங்கள் மற்றும் 515 பாலங்கள் சுத்தம் செய்யப் பட்டு நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கு ஏதுவாக தயார்நிலையில் உள்ளது.  ஆறுகள் மற்றும் கால்வாய்களில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு ஏதுவாக 121 இடங்க ளில் 1,18,435  மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 4,303 ஏரிகள் மற்றும் குளங்களில் நீர் இருப்பு விபரம் 7-இல் 76 சதவீதத்திலிருந்து 99 சதவீதமும், 745-இல்  51 சதவீதத்திலிருந்து 75 சதவீதமும் 1194-இல் 26  சத வீதத்திலிருந்து 50 சதவீதமும் 1541-இல்25 சதவீதத் திற்கு குறைவாகவும்  816-இல் நீரின்றியும் உள்ளது.   நிவாரணப்பணிகளை எவ்வித தொய்வும் ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டும். உயிர் சேதம், கால்நடை சேதம் ஆகியவை ஏற்படாதவாறு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.  மேலும் அனைத்துத்துறை அலுவலர்களும் தென்மேற்கு பருவமழை 2024–ஐ எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும்.  இவ்வாறு ஆட்சியர் கூறினார். இக்கூட்டத்தில்  மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ்  குமார், கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் இரா.லெலட்சுமணன்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.