திருவாரூர், செப்.28 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாதாந்திர விவசாயி கள் குறைதீர்க்கும் கூட்டம் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. மாவட்டத் தில் பயிர்கள் பாதிப்படைந்த அனைத்து விவசாயிகளுக்கும் தனி யார் பயிர் காப்பீட்டு நிறுவனம் பாதிப்புத் தொகை வழங்காமல் சில கிராமங்களுக்கு மட்டும் காப்பீட்டு தொகை வழங்குவதை கண்டித்து குறைதீர்க்கும் கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித் தனர். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற விவசாயிகள் தங்கள் பகுதியில் சாலை வசதி, வாய்க்காலை தூர்வார வேண்டும். நீர் தடுப்பணை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 500 கிராமங்கள் புறக்கணிப்பு கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி பேசுகையில், “பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் ஒரு பகுதியும், மாநில அரசு ஒரு பகுதியும், ஒன்றிய அரசு ஒரு பகுதி யும் பிரீமியர் தொகையாக பெற்றுக் கொண்டு தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகள் மிகவும் குறைந்த அளவு தொகையை வழங்குகின்றன. குறிப்பாக திருவாரூர் மாவட்டத் திற்கு 16 கோடி ரூபாயை மட்டும் பயிர் இன்சூரன்ஸ்க்கு வழங்கி இருக்கிறது. 72 கிராமங்களுக்கு வழங்கிவிட்டு மீதமுள்ள 500 கிரா மங்களை விட்டுவிட்டார்கள். ஆனால் பருவநிலை மாற்றத்தால் பெய்த கனமழையால், மாவட்டம் முழுவதும் பாதிப்பு உள்ளது. தமிழ் நாடு முழுவதும் ரூ.2500 கோடிக்கும் மேலான பிரீமியர் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனம் பெற்று உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இக்கோடோக்கியா இன்சூரன்ஸ் நிறுவனம் ஒரு பெருந்தொகையை எடுத்துக் கொண்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட அனைத்து கிராமங்க ளுக்கும் இன்சூரன்ஸ் இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டும். திருக்கண்ண மங்கையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வேளாண் துறை அலுவலகத்தை உடனே திறக்கப்பட வேண்டும். அதேபோல் மோசமாக உள்ள திருக்கண்ணமங்கை - அம்மையப் பன் சாலையை சீரமைக்க வேண்டும். குடவாசல் வட்டத்தில் உள்ள கரையாப்பாலையூர் மற்றும் திருத்துறைப்பூண்டி கொற்கை கிராமத்தில், விவசாய நிலங்களை அழித்துவிட்டு தொழில்பேட்டைகள் அமைக்கும் நடவடிக்கையை கை விட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்கள் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலை யில், வேளாண் நிலத்தை அழிக்கும் வகையில் எந்தவித தொழிற்சாலை யும் அமைக்க கூடாது. வேளாண் சார்ந்த தொழிற்சாலைகள் அமைப்பது குறித்து விவசாயிகளி டம் கலந்தாலோசனை செய்து, உரிய வகையில் தொழில்பேட்டை அமைக்க வேண்டும். பொதுப் பணித்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை விரைவில் நிரப்பினால் மட்டுமே, நீர் மேலாண் மையை சிறப்பாக செயல்படுத்த முடியும். வயல்வெளிகளில் மயில்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. அதேபோல் ஆடு, மாடு வளர்ப்பவர்கள், பயிரிட்ட வயல் களில் கால்நடைகளை மேய்ச்ச லுக்கு விட்டு விடுகின்றனர். குடவாசல்- ஏருந்தவாடி தலைப்பு ஏ வாய்க்கால் மற்றும் கருங்குளம் செல்லும் வாய்க்காலை தூர்வார வேண்டும். வலங்கைமான் பேரூ ராட்சி 12 ஆவது வார்டு கோவில்பத்து பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள வாய்க்காலையும் உடனே தூர்வார வேண்டும்” வலியுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வரு வாய் அலுவலர் சண்முகநாதன் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவ லர்கள், முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.