districts

விராலிமலை: சாலை விபத்தில் 4 பேர் பலி

புதுக்கோட்டை, ஜூலை 5-

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே புதன்கிழமை நடந்த சாலை விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.

    திருநெல்வேலி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(42), திருச்சியைச் சேர்ந்த  கணேஷ்குமார் (34), முரளி (37), சுரேஷ், ரவிக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர், ரெட் டாக்ஸி  எனும் வாடகை காரை அமர்த்திக் கொண்டு  புதன்கிழமை அதிகாலை திருச்சிக்குச் சென்றுள்ளனர்.

    இதில் முரளி, ரவிக்குமார் ஆகியோர் திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் அலுவலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். காரை கணேஷ்குமார் ஓட்டியுள்ளார். கார் விராலிமலை அருகே மதுரை-திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் லஞ்சமேடு என்ற இடத்தில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்தது. அப்போது சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லோடு ஆட்டோவில் மோதி, அதே வேகத்தில் அருகில் இருந்த  பேருந்து நிறுத்தத்திலும் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் கார் ஓட்டுநர் கணேஷ்குமார் மற்றும் சுரேஷ், ராஜ்குமார், ரவிக்குமார் ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயி ரிழந்தனர்.

   முரளி என்பவர் ஆபத்தான நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில்  அனு மதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த விராலி மலை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று  உடல்களைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

;