மயிலாடுதுறை, பிப்.2 - மயிலாடுதுறையில் 3 ஆவது புத்தகத் திருவிழா கோலாகலமாக துவங்கி நடை பெற்று வருகிறது. தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி கலை யரங்கில் துவங்கிய புத்தகத் திருவிழாவை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார், தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் (ஓய்வு) முனைவர் வெ.இறையன்பு ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்தார். விழாவில் மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், “மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித் துறை மற்றும் பொது நூலக இயக்ககம், ப.பா.சி இணைந்து நடத்தும் 3 வது புத்தகத் திருவிழா துவங்கியது. இப்புத்தகத் திருவிழாவில் தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களின் 65 புத்தக விற்பனை அரங்குகள், தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்களை பொதுமக்கள் அறியும் வகையில் திட்ட விளக்க கண்காட்சி அரங்கு கள் இடம்பெற்றுள்ளன. மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து வகையான புத்தகங்களும், பொது அறிவுத் திறனை வளர்த்துக் கொள்ள தேவையான புத்தகங்களும், வாசிப்பாளர்களுக்கான புத்தகங்களும் கிடைக்கிற வகையில் இப்புத்தகத் திருவிழாவானது மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், புகழ்பெற்ற 20 பேச்சாளர்களின் சொற்பொழிவுகளும், பட்டிமன்றம், நாடகம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன” என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் கோ.ஸ்டாலின், மாவட்ட வரு வாய் அலுவலர் நா.உமாமகேஸ்வரி, தென் னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.