மயிலாடுதுறை, மார்ச் 18 - மயிலாடுதுறை மாவட்டம், கொள் ளிடம் ஒன்றியம் எடமணல் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கி வரும் தார் தொழிற்சாலையை அகற்றக் கோரி திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் எடமணல் பகுதி பொது மக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீர்காழி அருகேயுள்ள சூரக்காடு பகுதி யில் தார் தொழிற்சாலை பல ஆண்டு களாக இயங்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் ஏற்பட்ட பாதிப்பில் 31 பேர் நோய்த்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ள னர். நூற்றுக்கும் மேற்பட்டோர் புற்று நோய், நுரையீரல் பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிற இந்த தொழிற் சாலையை மூடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நடத்திய தொடர் போராட்டங் களை அடுத்து, திருநகரி பகுதிக்கு இந்தத் தொழிற்சாலை மாற்றப்பட்டது. அப்பகுதி கிராம மக்களும், மார்க்சி ஸ்ட் கட்சியும் நடத்திய போராட்டத் திற்கு பிறகு, அங்கிருந்து தற்போது செயல் படுகிற எடமணல் கிராமத்தில் குடியிருப்பு களை ஒட்டிய பகுதியில் சில மாதங்க ளுக்கு முன்பு தார் தொழிற்சாலை நிறுவப் பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆலை யிலிருந்து வெளியேறும் நச்சுக் கலந்த கழிவுகளால் எடமணல், வருசப்பத்து, வடகால், கடவாசல், திருக்கருக்காவூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங் களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிக மான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுச்சூழல் ஆணையம் உள்ளிட்ட எந்த துறையிடமும் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட இந்த தார் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டுமென அரசுத் துறை அதிகாரி களிடம் தொடர்ந்து முறையிடப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில் திங்களன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் திரண்ட பொதுமக்கள், கண்டன முழக்கங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறை தாக்குதல் - கைது
கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் துரைராஜ், டி.சிம்சன், கொள்ளிடம் ஒன்றியச் செய லாளர் கே.கேசவன், கொள்ளிடம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பாரதிராஜா, சிவிஆர். ஜீவானந்தம், சீர்காழி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செல்லப்பன், எஸ்.ஞான பிரகாசம் மற்றும் கட்சி உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் என 500-க்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். போராட் டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்களை, சீர்காழி காவல்துறை அராஜகமான முறையில் தாக்கி கைது செய்தது. மக்களின் நலனுக்காக போராடிய கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்த காவல்துறையினரை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுதலை செய்யக் கோரியும், சட்ட விரோதமாக செயல்படும் தார் தொழிற் சாலையை மூடக் கோரியும் மயிலாடு துறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஜி.ஸ்டாலின் தலைமையில் போராட் டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஏ.ரவிச்சந்திரன், சி. விஜயகாந்த், கே.பி.மார்க்ஸ், மயிலாடு துறை ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் டி.துரைக்கண்ணு மற்றும் மாவட்டக் குழு, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள் பங்கேற்ற னர். பின்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்த மாவட்ட ஆட்சியர், போராட்டத்தில் பங் கேற்றவர்களை விடுவிப்பதாகவும், தார் தொழிற்சாலையில் உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித் தார். இதையடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.