அறந்தாங்கி, பிப்.12 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செலக்சன் கல்விக் குழுமத்தின் 24 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கண்ணையன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விஜய் டிவி பிரபலம் முத்துக்குமரன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவர்களை கௌரவிக்கும் விதமாக, அவர்கள் தற்போது சிறந்து விளங்கும் பல்வேறு துறைகள் சார்ந்து பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள், அறந்தாங்கி காவல் நிலைய துணை ஆய்வாளர் ரமேஷ்பாபு, தலைமை காவலர் செந்தில்குமார், அறந்தாங்கி ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கார்த்திக், ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக பள்ளி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் கங்கா நன்றி கூறினார்.