திருவாரூர், செப்.25 - திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்தில், திருவிடைவாசல் மற்றும் திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சேர்ந்த 18 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். திருவிடைவாசலில் நடந்த நிகழ்ச்சிக்கு கொரடாச்சேரி ஒன்றியச் செயலாளர் டி.ஜெய பால் தலைமை வகித்தார். திருவிடைவாசல் கிராமத்தில் 15 பேர் கட்சியில் இணைந்தனர். அவர்களை வரவேற்று, கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி செந்துண்டு அணிவித்து உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.சீனிவாசன், எஸ்.தம்புசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் சி. லோகநாதன் ஆகியோர் கலந்து கொண்ட னர். திருக்கண்ணமங்கை திருக்கண்ணமங்கை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் குடும்பத் துடன் இணைந்த 3 பேரை வரவேற்று, அவர்களுக்கு செந்துண்டு அணிவித்து மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி உரை யாற்றினார். கொரடாச்சேரி ஒன்றியச் செய லாளர் டி.ஜெயபால், மாவட்டக் குழு உறுப்பி னர் கே.சீனிவாசன், வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.ஜெய்கிஷ் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.