நாடாளுமன்றத் தேர்தலையொட்டி நூற சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் வகையில், திருச்சி காவேரி பாலத்தில் பிரம்மாண்டமாக வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் ஓவியங்களை மக்களின் பார்வைக்கு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஞாயிறன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, துணை ஆட்சியர் வேலுமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.