கும்பகோணம், டிச.22- சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் கலி போர்னியா பேராசிரியர்களுக்கு ‘சாஸ்த்ரா இராமானுஜன்’ விருது வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச இராமானுஜன் மையத்தில், உலக அளவிலான சீனிவாச இராமானு ஜன் 19 ஆவது சர்வதேச கருத்தரங்கம் மற்றும் சாஸ்த்ரா இராமானுஜன் விருது வழங்கும் விழா 2023 டிச.20 முதல் 22 வரை நடைபெற்றது. கருத்தரங்கத்தின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முன்னாள் செயலாளர் முனை வர் இராமசாமி 2022 மற்றும் 2023 ஆண்டிற்கான ‘சாஸ்த்ரா இராமானு ஜன்’ விருதுகளை வழங்கினார். அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக முனைவர் யன்குவின் டேங்க் மற்றும் முனைவர் ருய்சியாங் சங் ஆகியோர் இவ்விருதினைப் பெற்ற னர். இந்த விருது, தலா 10,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான தொகை மற்றும் விருது பட்டயத்தை உள்ளடக்கியது. இவ்விருது சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தால் 2005 ஆம் ஆண்டு முதல் உலகளவில் சீனிவாச இராமானுஜனின் எண்ணியலில் சிறப்பாக ஆராய்ச்சி செய்த, 32 வயதிற்குட்பட்ட கணிதவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. அமெரிக்கா ப்ளோரிடா பல்கலைக் கழக பேராசிரியரும், சாஸ்த்ரா இராமா னுஜன் விருது குழு தலைவருமான பேரா.கிருஷ்ணசாமி அல்லாடி, “லண்டன் ராயல் சொசைட்டியும் இவ் விருதைப் பெருமைப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் கணிதவியலின் உயரிய விருதான ‘பீல்ட் விருது’ பெறு வதற்கான நுழைவு வாயிலாக இவ்விருது திகழ்கிறது” எனக் குறிப்பிட்டார். முன்னதாக சாஸ்த்ரா பல்கலைக் கழக திட்டமிடல் மற்றும் வளர்ச்சி புலத் தலைவர் பேராசிரியர் சுவாமிநாதன் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசை வழங்கினார். இக்கணித மாநாட்டில் விருது பெற்ற அமெரிக்கா கலிபோர்னியா பல்கலைக் கழக முனைவர் யன்குவின் டேங்க், ருய்சியாங், அமெரிக்கா, ஆஸ்திரியா, கனடா, ஜெர்மனி மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களைச் சார்ந்த கணிதப் பேராசிரியர்கள் ஸ்ரீனிவாச இரா மானுஜனின் எண்ணியல் கோட்பாடு தொடர்புடைய பல்வேறு தலைப்பு களில் உரையாற்றினர். இதில் 200-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். சீனிவாச இராமா னுஜன் மையப்புலத் தலைவர் இராம சாமி நன்றி கூறினார்.