districts

img

‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் அரியலூரில் 2 ஆம் கட்டத்தை முதல்வர் தொடக்கி வைத்தார்

அரியலூர், நவ.16- ‘ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்’ 2 ஆம் கட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரியலூரில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார். அரியலூரை அடுத்த வாரணவாசி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊட்டச்சத்தை உறுதி செய்தி திட்டத்தின் 2 ஆம் கட்டத்தினை ரூ.22 கோடி மதிப்பீட்டில் தொடக்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச் சத்து பெட்டகங்களை வழங்கினார். பின்னர் தாய்மார்களுடன் கலந்துரையாடினார்.  முன்னதாக அவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த ஊட்டசத்து கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு, ஊட்டச்சத்து உணவினை சாப்பிட்டு, அங்கன்வாடி குழந்தைகளுக்கு மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, திணை, லட்டு, தூயமல்லி அதிரசம், முறுக்குகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து தின்பண்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஆ.ராசா, சட்டப் பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சிறைச்சாலைக்கு சுற்றுச்சுவர் அமைக்க முதவரிடம் மனு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஆர்.கே.செல்வமணி என்பவரை கிளை சிறைச்சாலை அலுவல் சாரா பார்வையாளராக நியமனம் செய்துள்ளனர்.  இந்நிலையில் ஜெயங்கொண்டம் கிளை சிறைச்சாலை வளாகத்தை பார்வையிட்ட போது, அதன் மதில் சுவர் எந்நேரத்திலும் சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், கிளை சிறைச்சாலையும் மற்றொருபுறம் தாலுகா அலுவலகமும் உள்ளதால் அதிகளவில் பொதுமக்கள் வரும் பகுதியாக இருப்பதாலும், பொதுமக்களுக்கும் சிறைவாசிகளுக்கும் உயிர்சேத பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.  எனவே, போர்க்கால அடிப்படையில் மதில் சுவரை அப்புறப்படுத்திவிட்டு புதிய மதில் சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.கே.செல்வமணி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.  அந்த மனுவை தமிழக முதல்வரிடம் அளித்தார். மனுவை பெற்று கொண்ட முதல்வர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.