திண்டுக்கல், ஜுன் 8- 5 ஆண்டு காலம் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு குறித்தான பேச்சு வார்த்தையை உடனே துவக்க வேண் டும். பொது இன்சூரன்ஸ் நிறுவனங் களை தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திண்டுக்கல்லில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒரு மணி நேர வெளிநடப்பு போராட்டமும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவன தொழிற்சங்கங்களின் கூட்டுப் போராட்டக்குழு சார்பாக ஜுன்.20ம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். இந்நிலையில் இக் கோரிக்களை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும் இணைந்து அலுவலகத்திலிருந்து ஜுன்.8 அன்று வெளிநடப்பு போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து பெரியார் சிலை அருகே யுள்ள நியூ இந்தியா அசுரன்ஸ் அலுவல கம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக சுப்பு ராஜ் தலைமை வகித்தார். நேசனல் இன்சூரன்ஸ் அதிகாரிகள் சங்கம் சார்பாக அரவிந்தன், நியு இண்டியா அசுரன்ஸ் அதிகாரிகள் சங்கம் சார்பாக கோவிந்தராஜ், யுனைட்டெட் இந்தியா முதுநிலை கோட்ட மேலாளர் ரவிச்சந்தி ரன், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பெரியசாமி, மாவட்டச்செயலாளர் கௌதமன் ஆகி யோர் பேசினர். (ந.நி)