திண்டுக்கல்/மதுரை, ஜூன் 13- திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களுக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நான்காவது ஒன் றிய மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு பாக்கியம், வாசுகி, தனமேரி ஆகியோர் தலைமை வகித்தனர். மாநி லத் துணைத்தலைவர் கே. பாலபாரதி, மாவட்டச் செய லாளர் ஜி.ராணி, மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வனஜா ஆகி யோர் பங்கேற்றனர். மாநாட்டில் தலைவராக ஏ.பாக்கியம், செயலாள ராக ஆர்.தங்கமணி, பொரு ளாளராக ஜீவாநந்தினி, துணைத்தலைவர்களாக தனமேரி, ரேணுகா, துணைச் செயலாளர்களாக வாசுகி, சுதந்திரபாய், செல்வக்கனி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். திண்டுக்கல் மாநகராட்சி யை யொட்டியுள்ள தாடிக் கொம்பு அருகேயுள்ள டி. பள்ளபட்டி, குமாரபாளை யம், நல்லமநாயக்கன்பட்டி. வெள்ளோடு, நரசிங்கபுரம், கொட்டபட்டி, சென்று வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுள் ளன. இதனால் கிராமப்புறங் களில் இருந்து நகர்ப்பகு திக்கு வரும் உழைக்கும் பெண்கள் போக்குவரத்து வசதியின்றி தவிக்கின்றனர். இரவு நேரத்தில் பேருந்து கள் இயங்காததால் வேலை முடித்துச் செல்லும் போதும் ஆட்டோவில் அதிகக் கட்ட ணம் செலுத்தி செல்கின்றனர். கிராமப்புறங்களுக்கு பேருந்துகளை இயக்க வேண்டுமென மாநாட்டில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது.
மதுரை
அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் செல்லூர் பகுதிக்குழு சிறப்புப் பேரவை எஸ்.இந்திராணி தலைமை யில் நடைபெற்றது ஜி.நாகலெட்சுமி முன் னிலை வகித்தார், அமைப் பின் கொயை மூத்த உறுப்பி னர் சிவகாமியம்மாள் ஏற்றி வைத்தார், எஸ்.மைதிலி அஞ்சலி தீர்மானம் வாசித் தார். பி.சித்ரா வரவேற்றுப் பேசினார். மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.ஜீவகலா துவக்கவுரையாற்றினார், மாவட்ட நிர்வாகி பி. யமுனா, வாலிபர் சங்க பகுதிக்குழு செயலாளர் கே.கார்த்திக் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாதர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர். லதா நிறைவுரையாற்றினார். பேரவையில் தலைவர் மைதிலி, செயலாளர் பா. பழனியம்மாள் பொருளாளர் ராவியத்துல் பசிரியா உள் ளிட்டு 13 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது.