நத்தம், பிப்.19- திண்டுக்கல் மாவட்டம் நத்தத் தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி என்ப வர் அளித்த தகவலின்படி போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரி யின் வரலாற்று துறை பேராசிரியர் மற்றும் மாணவர்கள் நத்தத்தில் செல்லம்புதூர் பகுதியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் முன்பு ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கி.பி.16, 17- ஆம் நூற்றாண்டை சேர்ந்த நாயக் கர் காலத்து குதிரை வீரன் நடுகல் ஒன்றை கண்டறிந்தனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், திண்டுக்கல் மாவட் டத்தில் அமைந்துள்ள நத்தம் என்ற ஊர் சங்ககாலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல வர லாற்றுச் சான்றுகளை பெற்றுள் ளது. இதைத் தவிர இந்திய சுதந்தி ரப் போராட்டத்தின் போது சில முக்கியமான போராட்ட நிகழ்வுகள் நடைபெற்ற ஊராகவும் தமிழக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது.நத்தம் என்பதற்கு விளைநிலம் சார்ந்த மக்கள் வாழும் இடம் என்று பொருள். பிற்கால பாண்டியர்கள் காலத்தில் நத்தம் ஊரும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் துவராபதி நாடு என்ற பிரிவில் இருந்துள்ளது. துவராபதி வேளாண் என்ற நாட்டுப் பிரிவில் இருந்துள்ளது. சேர நாட் டில் இருந்து வணிக பெருவழி பாதையும், சோழ நாட்டிலிருந்து ஒரு வணிக பெருவழிப் பாதை யும் நத்தத்தில் இணைந்து பின்னர் மதுரை சென்றுள்ளதை வரலாறு கள் கூறுகின்றன.வரலாற்று சிறப்பு களை பெற்றுள்ள நத்தத்தில் பட்டத் தரசி அம்மன் கோவிலுக்கு முன்பு 3 அடி உயரம், 3 அடி அகலத்தில் வீரன் ஒருவன் அலங்கரிக்கப்பட்ட குதிரையில் அமர்ந்த நிலையில் புடைப்புச் சிற்பமாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. நாயக்கர் காலத்தில் வீரர்கள் அணியும் கொண்டை அமைப்புடன் வலது கையில் பிடித்துள்ள ஈட்டியை முன்னோக்கி வீசி எறிவது போன்ற தோற்றத்திலும், இடதுகை குதிரை யின் கடிவாளத்தை பிடித்த நிலை யிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.குதிரை வீரனின் வீர மரணத்திற்கு பின்பு அவனுடைய இரு மனைவி யர்களும் சதி என்னும் உடன் கட்டை ஏறி உயிர் நீத்துள்ளனர் என்பதை வெளிக்காட்டும் சிற்பங்களாக குதிரைக்கு முன் வடிவமைக்கப் பட்டுள்ளனர். இவ்விரு பெண் களும் நாயக்கர் காலத்து பட்டத் தரசிகள் அணியும் குந்தளம் எனும் கொண்டை அணிந்துள்ளனர்.குதி ரைக்கு பின்னால் இரு சேவகர் களின் சிற்பம் உள்ளது. அதில் ஒரு சேவகர் குதிரை வீரனுக்கு குடை பிடித்தபடி உள்ளார். பொதுவாக குதிரையும், சேவகர்களும் குடை பிடித்த காட்சி குறுநில மன்னர், தளபதி ஆகியோருக்காக எடுக் கப்படும். நடுகலில் காட்டப்படும் இவற்றுடன் ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இக்குதிரைவீரன் இப்பகுதியை நாயக்கர் காலத்தில் ஆட்சி செய்த குறுநில மன்னன் அல்லது தள பதியாக இருக்கலாம். ஆட்சி செய்த குறுநில மன்னன் இங்கு நடை பெற்ற சண்டையில் வீர மரணம் அடைந்த பின் அவன் நினைவாக இந்த நடுகல் எழுப்பப்பட்டிருக்க வேண்டும். மேலும் நடுகல்லில் கல் வெட்டு சான்றுகள் இல்லாததால், சரியான செய்தியை அறிய முடி யவில்லை என்று தெரிவித்தனர்.