districts

img

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்

தருமபுரி, ஜூன் 11- குடிநீர் கேட்டு வேட்டரப்பட்டி கிராமமக்கள், அரூர் - திருப்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் காலிகு டங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கே.வேட்ரப்பட்டி கிராமத்தில் சுமார் 400க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர்.

இங்கு வாரத்திற்கு ஒரு நாள் மட்டுமே ஒகேனக்கல் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தேவைக் கேற்ப விநியோகம் செய்யாததால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படு கிறது. இதனால் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். பலர் குடிநீருக்காக விவசாயக் கிணறுகளுக்கு நடந்து சென்று, தண்ணீர் எடுத்து வர வேண்டியுள்ளது.

இச்சூழலில் வீட்டு உபயோகத்திற்காக ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்டு வந்த தண்ணீரை பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த ஒருவார கால மாக ஊராட்சி மூலம் வழங்கப்பட்டு வந்த தண்ணீரும் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறை யிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இதனால் ஆவேசம டைந்த அப்பகுதிமக்கள், அரூர் –திருப்பத்தூர் தேசிய நெடுஞ் சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் காவல் துறையினர், மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி தண்ணீர் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை யடுத்து, அனைவரும் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.