districts

img

தில்லியில் விவசாயிகள் ஆவேசம் மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு ஆர்ப்பாட்டம்

தருமபுரி, நவ.30- வேளாண் விரோத சட்டங்களை திரும்ப பெறக்கோரி தலைநகர் தில்லி யில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தும் மத்திய அரசை கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி தொலைபேசி நிலை யம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு நகரச்செயலாளர் ஆர்.ஜோதிபாசு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் பி.டில்லி பாபு, மாவட்ட  செயலாளர் ஏ.குமார்,  மாவட்ட செயற்குழு  உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி, ஒன்றிய செயலா ளர் என்.கந்தசாமி, மாவட்டகுழு  உறுப்பினர்கள் கே.பூபதி, ஏ.ஜெயா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், எலச்சிபா ளையம் தபால் நிலையத்தை மார்க்சிஸ்ட் கட்சியினர் முற்றுகை யிட்டனர். இப்போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சு.சுரேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய குழு  உறுப்பினர்கள் பி.சுரேஷ், சி.சுந்த ரம், கே.ஸ்.வெங்கடாசலம், ஆர்.ரமேஷ். வி.சோமசுந்தரம் மற்றும் பி.மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட் டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

;