தருமபுரி, டிச.31- தருமபுரி அருகே நீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே ஜில் திம்ம னூர் பகுதியை சேர்ந்த ஆனந்தன் மகன் திவாகர் (14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், நண்பர்களுடன் சின்னாற்றில் கரையோரத்தில் குளித்து கொண்டிருந்தார். அப்போது திவாகர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். அவரின் நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காப்பாற்றுவதற்குள் சிறுவன் நீரில் மூழ்கி பலியாகினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையின், சிறுவனின் சட லத்தை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.