தருமபுரி, ஜூன் 4- தருமபுரி மக்களவைத் தொகுதி யில் கடந்த 1996-ஆம் ஆண்டு முதன் முறையாக பாமகவின் பாரி மோகன் வெற்றி பெற்றார். அவரை தொட ர்ந்து, 1999-ஆம் ஆண்டு தேர்தலில் பு.த. இளங்கோவன், 2004-ஆம் ஆண்டு ஆர்.செந்தில் குமார் ஆகியோர் பாமக சார்பில் வெற்றி பெற்றனர்.
2014-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக 37 தொகுதிகளை கைப்பற்றிய நிலையிலும், தருமபுரியில் அன்புமணி வெற்றி பெற்றதால் இந்த தொகுதி தங்களின் கோட்டை என்று பாமகவினர் கூறினர்.
ஆனால், 19 ஆண்டுகளுக்குப் பிறகு தருமபுரி தொகுதி யை 2009ம் ஆண்டில் கைப்பற்றிய திமுக, 2019 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றது. இதனால், 2024 தேர்தலிலும் ‘இந்தியா’ கூட்டணி சார்பில் திமுகவே போட்டியிட்டது.
வேட்பாளராக ஆ. மணி களம் இறக்கப்பட்டார். அவரை எதிர்த்து பாஜக கூட்டணியில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, அதிமுக சார்பில் மருத்துவர் ஆர். அசோகன் ஆகியோர் போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது, திமுக வேட்பா ளரும் பாமக வேட்பாளரும் மாறி மாறி முன்னிலை பெற்ற னர். தமிழ்நாட்டில் இந்த தொகுதியில் மட்டும் கடும் போட்டி நிலவியது. இறுதியில், இந்த தொகுதியை ‘இந்தியா’ கூட்டணி தக்க வைத்துக் கொண்டது.
கடந்த முறை சவுமியாவின் கணவர் அன்பு மணி தோல்வியடைந்த நிலையில், இந்த தேர்தலில் அவரது மனைவி சவுமியா தோல்வியடைந்துள்ளார்.