districts

img

வி.கே.சசிகலாவுடன் வைத்திலிங்கம் சந்திப்பு

தஞ்சாவூர், செப்.9- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே முன்  னாள் அமைச்சர் ஆர்.வைத்  திலிங்கமும், ஜெயலலிதா வின் தோழி வி.கே.சசிகலா வும் சந்தித்துப்  பேசினர். ஓ.பன்னீர்செல்வம், அதி முகவில் அனைவரும் ஒற்று மையாக இணைந்து செயல் பட வேண்டும் என்றும் சசி கலா, தினகரனை மீண்டும் அதிமுகவுக்கு அழைப்பது என்றும் பேசி வருகிறார். இந்நிலையில், முன் னாள் அமைச்சர் ஆர்.வைத்  திலிங்கம் தஞ்சாவூர் மாவட் டம் ஒரத்தநாடு அருகே காவாரப்பட்டு கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவிற்கு சென்று விட்டு   தனது காரில் திரும்பிக் கொண் டிருந்தார். அப்போது மன் னார்குடியில் இருந்து, ஒரத்த நாடு வழியாக தஞ்சாவூர் நோக்கி காரில் சசிகலாவும் வந்து கொண்டிருந்தார். ஓவல்குடி என்ற இடத்  தில் சசிகலா கார் வருவதால் வைத்திலிங்கம் காரை ஓர மாக நிறுத்தினார். அப்போது சசிகலா கார் வந்ததும், வைத்திலிங்கம் காரிலிருந்து இறங்கிச் சென்று சசிகலா வை சந்தித்தார். உடன் சசி கலாவும் காரிலிருந்து இறங்கி வைத்திலிங்கத்தை நலம் விசாரித்தார். அப்போது வைத்திலிங் கம் ஆதரவாளர் ஒருவர்  அண்ணனுக்கு இன்று பிறந்த நாள் என கூறியதும், சசிகலா தனது காரில் இருந்து சாக்  லெட்டை எடுத்து வைத்தி லிங்கத்துக்கு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மேலும், இருவரும் சுமார் பத்து நிமிடம் பேசிக்கொண்டு  இருந்து விட்டு புறப்பட்டு சென்றனர். இந்த இருவரின் சந்திப்பு அரசியல் வட்டா ரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

;