தஞ்சாவூர், ஜூன் 1- தஞ்சாவூரில் புதன்கிழமை விடைத்தாள் திருத்தும் மையத்தில், முதன்மைக் கல்வி அலுவலரைக் கண்டித்து, விடைத்தாள்களை திருத்தாமல் ஆசிரியர்கள் பணி புறக்கணிப் புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி புதன் கிழமை தொடங்கியது. இதன்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களில் விடைத் தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டுள் ளது. ஆனால், ஒரத்தநாடு கல்வி மாவட்டத் தைச் சேர்ந்தவர்களுக்கு மையம் அமைக்கப் படாததால், ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய மையத்துக்குச் சென்று விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடலாம் என அறி விக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்படி, ஒரத்தநாடு கல்வி மாவட் டத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் அருகே யுள்ள பெஸ்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்ட விடைத்தாள் திருத்தும் மையத்துக்கு புதன்கிழமை வந்தனர். அங்கு வந்த முதன்மைக் கல்வி அலுவலர் மு.சிவகுமார், இம்மையத்தில் அதிக அள வில் ஆசிரியர்கள் இருப்பதாகவும், பட்டுக் கோட்டை மையத்தில் ஆசிரியர்கள் குறை வாக உள்ளதாகவும், அதனால் ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பட்டுக் கோட்டைக்குச் செல்லுமாறும் கூறினார். இதைத்தொடர்ந்து, ஆசிரியர்கள் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இரு தரப்பினரும் பேசிக் கொண்டிருந்தபோது முதன்மைக் கல்வி அலுவலர் கடுமையாகப் பேசியதாக ஆசிரியர்கள் தரப்பில் அதிருப்தி ஏற்பட்டது. இதனால், ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து அறையை விட்டு வெளியேறி போராட்டத்தில் ஈடுபட்ட னர். முதன்மைக் கல்வி அலுவலர் வந்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினால் தான் விடைத்தாள் திருத்தும் பணியை தொடங் குவோம் என ஆசிரியர்கள் கூறினர். இதன் காரணமாக தஞ்சாவூரில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.