districts

img

தமிழ் பல்கலை.யில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

தஞ்சாவூர், ஜூன்.6 -  தமிழுக்கென்று உரு வாக்கப்பட்ட தஞ்சைத்  தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட் டங்களில் உள்ள ஏழை, எளிய, கிராமப்புற மாண வர்கள் பயன்பெறும் வகை யில், இலக்கியத்துறையில் துவங்கப்பட்ட ஒருங்கி ணைந்த முதுகலை முதலா மாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் மே மாதம் வழங்கப்பட்டது.

 இதில் 75 விண்ணப் பங்கள் பெறப்பட்டு இன வாரி சுழற்சி அடிப்படை யிலும், மதிப்பெண் அடிப்ப டையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற் கான சேர்க்கை ஜூன் 5  புதன்கிழமையன்று பல்க லைக்கழகப் பேரவைக் கூடத்தில் நடைபெற்றது. இச்சேர்க்கையில் கலந்து கொண்ட 38 மாணவர்களில் 34 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் துணை வேந்தர் வி.திருவள்ளுவன் தலைமையேற்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்ற மாண வர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசுகையில், “தமி ழை மேம்படுத்தும் வகை யில் உருவாக்கப்பட்ட பல் கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மட்டுமல்லாது தமிழைச் சார்ந்த 13 துறை கள்  நடைபெற்று வருகிறது. அதில் அந்தந்த துறை சார்ந்த  புலமை பெற்ற பேராசிரி யர்களின் நல்அறிவைப் பெறுவதற்கு மாணவர்க ளுக்கு இது ஒரு வாய்ப்பாக  அமையும்.

எனவே, மாண வர்கள் இவ்வரிய வாய்ப்பி னை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.  மேலும், இந்நிகழ்வில் தமிழறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையின் மேனாள் துறைத் தலைவருமான பேராசிரி யர் கு.வெ.பாலசுப்ரமணி யன் கலந்து கொண்டு பேசு கையில், “தமிழ் பயி லக்கூடிய மாணவர்களுக்கு, வெளிநாடு வாழ் தமிழர்கள் அறக்கட்டளைகள் மூலம் அளிக்கும் உதவித்தொகை யைப் பெற்று தமிழை நன் முறையில் பயில்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்” எனத் தெரிவித்தார்.  

கலைப்புல முதன்மைய ரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும், இலக்கியத் துறை பேராசிரியருமான  பெ.இளையாப்பிள்ளை  நோக்கவுரையாற்றினார். உதவிப் பேராசிரியர் இரா.தனலெட்சுமி  வரவேற்றார்.  இந்நிகழ்வில் பதிவாளர் (பொ) பேராசிரியர் சி.தியாக ராஜன் மற்றும் மாணவர்க ளின் பெற்றோர்கள் திர ளாகக் கலந்து கொண்டனர். 

;