தஞ்சாவூர், செப்.25 தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவா சத்திரம் ஒன்றியம் முடச்சிக்காடு செ.பன்னீர் செல்வம், பொதுமக்கள் சார்பில் சேதுபாவா சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்ப தாவது: “முடச்சிக்காடு ஊராட்சியில் உள்ள முடச்சிக்காடு - கைவனைவயல் இணைப்பு சாலையில் உள்ள, திருஞானம் நகரில் ஒரு கிலோ மீட்டர் வரை சாலை பழுதடைந்த நிலை யில் உள்ளது. கடந்த ஓராண்டாக சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், இருபுற மும் புதர்கள் மண்டியும், மரம், செடிகள் வளர்ந்தும், போக்குவரத்துக்கு பயனற்ற தாக உள்ளது. இப்பகுதி மக்கள், இந்த சாலை வழியாக முடச்சிக்காடுக்கு செல்லும் முக்கிய குறுக்குச் சாலை ஆகவும் உள்ளது. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த சாலையை பராமரித்து செப்பனிட்டு, தரம் உயர்த்தி தர வேண்டும். இதேபோல், அருகில் உள்ள எதி ரணை குளத்திற்கு தண்ணீர் செல்லும் வரத்து வாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தூர்ந்து போய் உள்ளன. எனவே வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்வதுடன், எதிரணை குளத்தையும் தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.