districts

img

நெல் கொள்முதலை தனியாருக்கு விடக் கூடாது! தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

தஞ்சாவூர், ஜூலை 10-  தமிழ்நாடு விவசாயிகள் சங்க  தஞ்சை மாவட்ட 26 ஆவது மாநாடு  ஒரத்தநாடு எம்.ஆர்.திருமண  மண்டபம் தோழர் தாமரங் கோட்டை ஏ.கோவிந்தசாமி நினை வரங்கில் சனிக்கிழமை நடை பெற்றது.  மாநாட்டுக்கு மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலை வர் எஸ்.கோவிந்தராஜ் கொடி யேற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஞான மாணிக்கம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்பு குழு தலை வர் என்.சுரேஷ்குமார் வரவேற்றார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம் துவக்க உரையாற்றி னார். மாவட்டப் பொருளாளர் எம். பழனிஅய்யா வரவு-செலவு அறிக்கை வாசித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எஸ்.தமிழ்செல்வி, ஆர்.கலைச்செல்வி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க  மாவட்டச் செயலாளர் கே.பக்கிரி சாமி, சிஐடியு மாவட்டச் செயலா ளர் சி.ஜெயபால், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வரவேற்புக்குழு செயலா ளர் டி.மோகனதாஸ் நன்றி கூறி னார். 

நிர்வாகிகள் தேர்வு
மாநாட்டில் மாவட்டச் செயலா ளராக என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவராக பி.செந்தில்குமார், மாவட்டப் பொருளாளராக எம்.பழனிஅய்யா மற்றும் 34 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மேலும், மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.  உணவுப் பாதுகாப்புக்கு அச்சு றுத்தலையும், விவசாயிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் நிலை  உள்ளதால், தமிழக அரசு நெல் கொள்முதலை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். தில்லியில் போராடிய விவசாயி களை ஏமாற்றும் வகையில், வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசைக் கண்டித்து ஜூலை 31 ஆம் தேதி, ஐக்கிய விவசாயி கள் முன்னணி நடத்தும் சாலை  மறியல் போராட்டத்தை தஞ்சாவூர் மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்துவது.  தஞ்சை மாவட்டத்தில் விவசா யம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். வேளாண்  பொருட்களை அரசே நேரடி யாக கொள்முதல் செய்து, கட்டுப் படியான விலை வழங்க வேண்டும். ஒரத்தநாடு வேளாண்மை அலுவல கம் மூலம், அனைத்து விவசாயி களுக்கும் பாரபட்சமின்றி அரசு சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பயிர் பாசன கடைமடைப் பகுதி களை முறையாக தூர்வாரி நீர்  கிடைப்பதை உறுதி செய்ய வேண் டும். ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்க நாடு, கீழையூர், பருத்திக் கோட்டை, அரசப்பட்டு பகுதியில் இயங்கி வந்த அனைத்து நீரேற்று நிலையங்களையும் முறையாக செயல்படுத்த வேண்டும். ஒரத்த நாட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர்  அலுவலகம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரணி
முன்னதாக ஒரத்தநாடு பெரி யார் சிலையில் இருந்து 500-க்கும்  மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு, தப்பாட்டம் முழங்க,  மாநாட்டு மண்டபம் வரை ஊர்வல மாக சென்றனர்.