districts

அரசுப் பள்ளியில்  “நம்ம ஊரு சூப்பரு”  தூய்மைப் பணி

தஞ்சாவூர், செப்.8-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவுப்படி, “நம்ம ஊரு சூப்பரு” என்ற  திட்டத்தின் கீழ், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குருவிக் கரம்பை ஊராட்சியில், அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதை யொட்டி, பள்ளி வளாகத்தில் உள்ள இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு, குப்பைகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ்  சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு, குருவிக்கரம்பை ஊராட்சி மன்ற தலைவர் வைரவன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை  ஆசிரியர் மனோகரன் வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவ லர் (கி.ஊ) சடையப்பன் முன்னிலை வகித்தார். இதில், தூய்மை பாரத இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் விழிப்புணர்வு உரையாற்றினார். தொடர்ந்து தூய்மைக்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. 

;