தஞ்சாவூர், ஏப்.11- ஹிட்லரைப் போன்று எதிர்க்கட்சி களே இல்லாத நிலையை பிரதமர் மோடி உருவாக்கி வருகிறார் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன். தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் திமுக வேட்பாளர் ச. முர சொலியை ஆதரித்து புதன்கிழமை இரவு பிரச்சாரம் செய்த அவர் மேலும் பேசியதாவது:
சர்வாதிகாரம், பாசிசத்துக்கு எதி ரான போர் நடக்கிறது. இதில், இந்தியா கூட்டணி முன்னேறி வருகிறது. நம் நாட்டின் ஜனநாயகத்தை, மதச்சார் பின்மையை காப்பாற்றும் பொறுப்பை இந்தியா கூட்டணி ஏற்றுள்ளது. தமிழ் நாட்டுக்கு மோடி எத்தனை முறை வந் தாலும், மக்கள் ஏமாற மாட்டார்கள்.
அவர் ஒவ்வொரு முறை வரும்போதும், இந்தியா கூட்டணிக்கான வாக்கு வங்கி விகிதம் அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு இரண்டு கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு, ஒவ்வொரு வரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் போன்ற வாக்குறுதிகள் என்ன ஆனது எனக் கேட்டால், கச்சத்தீவு பிரச்சனை யை பேசுகிறார் மோடி. கடந்த 10 ஆண்டு களாக ஆட்சி செய்த மோடி, கச்சத்தீவை மீட்க எந்த நடவடிக்கையையும் எடுக்கா மல், இப்போது பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக பேசி வருகிறார்.
அரசமைப்புச் சட்டம் முழுவதை யும் மோடியும், அமித்ஷாவும் மீறுவது மட்டுமல்லாமல், அதை சீரழித்து விட்ட னர். அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ போன்ற அமைப்புகளைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவற்றில் பணியாற்றுபவர் களைத் தங்களது வீட்டு ஏவலாளி களைப் போன்று பயன்படுத்துகின்றனர்.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களின் வங்கிக் கணக்குகளை முடக்கி விட்டனர். ஜெர்மனியின் ஹிட்லர் போன்று இந்தியாவில் எதிர்க்கட்சிகளே இருக்கக் கூடாது என்பதற்காக அனைத்துக் கட்சிகளையும் முடக்கி வருகிறார் மோடி. இந்தியாவின் ஹிட்லர் போன்று செயல்படும் இவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அடுத்து தேர்தலே இருக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.