தஞ்சாவூர், டிச.8- தஞ்சை குருங்குளம் அரசு சர்க்கரை ஆலை தொழி லாளர்கள் சங்கத்தின் சார் பில், பேரவைக் கூட்டம் சங் கத்தலைவர் ராஜ்மோகன் தலைமையில் நடைபெற் றது. சங்கத்தின் செயலாளர் செந்தில் வரவேற்றார். சிஐடியு மாவட்டச் செய லாளர் சி.ஜெயபால், சிஐடியு மாவட்ட துணைச் செயலா ளர் ஏ.ராஜா, சம்மேளனக் குழு உறுப்பினர் பிரபு, என்.எம்.ஆர் சங்க தலைவர்கள் மாறன், சதாசிவம், முன் னாள் தலைவர் தர்மராஜ் உள் ளிட்டோர் உரையாற்றினர். கூட்டத்தில், தினப்படித் தொழிலாளர்கள் மற்றும் தினக் கூலித் தொழிலாளர் கள் கோரிக்கைகளை முன் வைத்து எதிர்வரும் டிசம்பர் 14 அன்று ஆலை வாயில் முன்பு கோரிக்கை ஆர்ப்பாட் டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.