tamilnadu

img

சர்வதேச முதியோர் தினம்: ஓய்வூதியர் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 1 – சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் தேதி  செவ்வாய்கிழமை தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங் கத்தின் திருப்பூர் வட்டக்கிளை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருப்பூர் தியாகி குமரன் சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டக்கிளை தலைவர் ப.மகுடேஸ்வரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஜி.சண்முகம் தொடக்கி வைத்து உரையாற்றினார்.  இதில் அரசு ஊழியர் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம், 17 பி குற்றச்சாட்டு வழங்கி ஓய்வூதியம் பெறுவதை நிறுத்தி மன உளைச்சல் ஏற்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஊழியருக்கு இணையான ஓய்வூதியம், மருத்துவப் படி, பயனுள்ள மருத்துவக் காப்பீடு ஓய்வூதியர் குறை தீர்க் கூட்டம் நடத்துவது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தோழமை அமைப்புகள் சார் பில் டி.துரைசாமி, பி.இ.அச்சுதன், என்.கருப்புசாமி, பா.சௌந்தர பாண்டியன், என்.எம்.தங்கம் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசி னர். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ.நிசார் அக மது நிறைவு செய்து வைத்து சிறப் புரை ஆற்றினார். திரளானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட் டத்தின் முடிவில் வட்டக்கிளை இணைச் செயலர் கி.கலியபெரு மாள் நன்றி கூறினார். அவிநாசியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக்கிளை தலைவர் எஸ்.கோபாலகிருஷ் ணன் தலைமை வகித்தார்.  இணை செயலாளர் விஜயலட்சுமி, பொரு ளாளர் ஏ.ஆர்.சண்முகம், துணைத் தலைவர் டி.முத்துசாமி, மாவட்ட இணைச் செயலாளர் எம்.பாக்கி யம், சாலைப் பணியாளர்கள் சங்க அவிநாசி செயலாளர் கருப்பன், திருப்பூர் சத்துணவு ஓய்வூதியர் சங்கத் தலைவர் அங்கப்பன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  தாராபுரம் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலை வர் பீர்ஜாபர் தலைமை வகித்தார். வட்ட துணைத்தலைவர்கள் இளங்கோ, வி.எம்.சுப்புரத்தினம், இணை செயலாளர்கள் மரியசெ லஸ்டின், முருகேசன், ஜீவானந் தம், அய்யாவு முன்னிலை வகித்த னர். வட்டபொருளாளர் கே.ரா ஜேந்திரன், கிருஷ்ணசாமி, தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க வட்டக் கிளை தலைவர் பி.ராஜி, பொது தொழிலாளர் சங்க செயலாளர் பி.பொன்னுசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நல சங்க தலைவர் வெள்ளைச் சாமி, மாவட்டபொருளாளர் கி.மே கவர்ணன் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். முடிவில் வட்ட துணைதலைவர் எம்.நசுருதீன் நன்றி தெரிவித்தார்.