கும்பகோணம், அக்.31- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாகரசம்பேட்டை ஊராட்சி கீழத் தெரு பகுதியில் ஏராள மான பட்டியல் வகுப்பு மக்கள் வசித்து வருகின்ற னர். இந்நிலையில் நாகரசம் பேட்டை வழியாக, ஆத்தி குளம் மற்றும் நகரப் பகுதி களுக்கு வருவதற்கு முடி கொண்டான் ஆற்றைக் கடக்க சிறு பாதை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அதுவும் சாலை வசதி யின்றி குண்டும் குழியு மாக இருக்கிறது. இந்த பாதையை சிலர் ஆக்கிர மித்து பயன்படுத்தி வரு கின்றனர். இதனால் மழைக் காலங்களில் இவ்வழியே செல்வதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது. மேலும் அங்குள்ள மயா னத்திற்கு சடலங்களை எடுத்துச் செல்லும் போது, பாடைகளின் மேற்பகுதியை தொடும் அளவிற்கு, மின் கம்பிகள் தாழ்வாக தொங்கிக் கொண்டிருக் கின்றன. இதனால் மிக கவ னத்துடன் சடலங்களை எடுத்துச் செல்ல வேண்டி யுள்ளது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், சம்பந்தப்பட்ட செம் மங்குடி மின்துறை அதி காரிகளுக்கு தகவல் தெரி வித்தும், இதுவரை தாழ்வான மின்கம்பி சரிசெய் யப்படவில்லை. புதிதாக வருபவர்கள் கவனிக்காமல் சென்றால் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடனடியாக மயா னத்திற்கு செல்லும் பாதையை சீரமைத்து, இந்த பாதை யில் தாழ்வாக தொங்கும் மின்கம்பியை அப்புறப் படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.