தஞ்சாவூர், டிச.28- தஞ்சாவூரில் இருநாட் கள் பார்வையற்ற மாண வர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகள் நடை பெறவுள்ளன. இப்போட்டி களில் பங்கேற்கும் மாண வர்களுக்காக 10 ஆயிரம் வாழைப்பழங்களை விவ சாயி ஒருவர் இலவசமாக வழங்கினார். தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங் கில், (டிச.28, 29) புதன், வியா ழன் ஆகிய இரு தினங்க ளுக்கு, 7 மண்டலங்களைச் சேர்ந்த பார்வையற்ற மாண வர்களுக்கான விளையாட்டு போட்டிகள், சமூக நலத் துறை சார்பில் நடைபெற வுள்ளது. இப்போட்டியில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த போட்டிகளில் பங் கேற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வாழைப்பழங் களை வழங்கியுள்ளார் திரு வையாறு அருகே வடுகக் குடியைச் சேர்ந்த வாழை விவசாயி எம்.மதியழகன் (50). மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தில் ஆணையர் குளோரி ஜெய சீலியிடம் ஒன்றரை டன் எடை யுள்ள 10 ஆயிரம் வாழைப் பழங்களை மதியழகன் வழங்கினார். இதுகுறித்து விவசாயி எம்.மதியழகன் கூறுகை யில், ‘‘நான் வாழை சாகுபடி செய்து வருகிறேன். கொரோனா காலத்தில் தஞ்சாவூர் மருத் துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு நான்கு முறை இல வசமாக வாழைப்பழங் களை வழங்கியுள்ளேன். தற்போது பார்வை யற்றோர்களுக்கான விளை யாட்டுப் போட்டிகள் நடை பெறவுள்ளது. இதில் பங் கேற்கும் மாணவ, மாணவி களுக்கு இலவசமாக வாழைப்பழங்களை வழங்க முடிவு செய்தேன். இதற்காக ஒன்றரை டன் எடையில் ரூ.40 ஆயிரம் மதிப்பீட்டில் 10 ஆயிரம் எண்ணிக்கை கொண்ட பூவன் ரக வாழைப் பழங்களை வழங்கியுள் ளேன்’’ என்றார்.