districts

img

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்த மின் ஊழியர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மின் வாரிய தொழிற்சங்கங்களுடன் 22.02.18ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 06.01.1998 முதல் இன்று வரை பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், காலியாக உள்ள கள உதவியாளர் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை தினக்கூலி அடிப்படையில் நியமித்து நிரந்தரம் செய்ய வேண்டும், கே2 அக்ரிமென்ட் நடைமுறையை ரத்து செய்து சீட் அக்ரிமென்ட் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பைச் (சிஐடியு) சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

;