districts

img

கும்பகோணத்தில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் ஆட்சியரிடம் அன்பழகன் எம்எல்ஏ மனு

கும்பகோணம், செப்.6 - கும்பகோணத்தில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரி டம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் கோரிக்கை மனு வழங்கி னார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆக. 23 ஆம் தேதி, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்துக்காக, செயல்ப டுத்தப்பட வேண்டிய 10 அம்சங்கள் அடங்கிய  பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக் கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி கும்பகோணம் தொகுதியில் பொதுமக்களின் நீண்ட கால, மிக முக்கிய  கோரிக்கைகள் ஆட்சியரிடம் வழங்கப்பட் டுள்ளது. இதில், கும்பகோணத்தை தலைமை யிடமாக கொண்டு, புதிய வருவாய் மாவட் டம் அறிவிக்க வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு, நாள்தோறும் பல  ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் நலனைக் கருத் தில் கொண்டு, கும்பகோணத்தில் புதிதாக  இடம் தேர்வு செய்து, நிலம் கையகப்ப டுத்தி, அரசின் நிதியுதவி மூலம், மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண் டும். கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில், விடுபட்ட 26 ஊராட்சிகளுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட வேண்டும். தாராசுரம் பேரூ ராட்சி பகுதிகளுக்கும் போதிய குடிநீர் வசதி செய்து தர வேண்டும். கும்பகோணம் தொகுதியில் அரசினர் சட்டக் கல்லூரி, பொறி யியல் கல்லூரி, பாலிடெக்னிக் ஆகியவை தொடங்க வேண்டும்.

கும்பகோணத்தில் கோயில்கள் அதிக மாக உள்ளதால், தேர்த் திருவிழா, தெப்பத்  திருவிழா, மாசிமகப் பெருவிழா, கருட சேவைகள் உள்ளிட்ட திருவிழாக்கள் நடை பெறும் காலங்களில், தேரோடும் வீதிகளில் சுவாமி தேரில் வலம் வரும் காலங்களில், வீதிகளில் குறுக்கே அமைந்துள்ள மின் இணைப்புகளை அடிக்கடி துண்டிக்க வேண்டி உள்ளது. இதனால், வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த கும்பகோணத்தில் பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் சிரமமாக உள்ளது. எனவே, தேரோடும் வீதி களில் மின் இணைப்புகளை புதைவட மின்  இணைப்புகளாக மாற்றி அமைக்க வேண்டும். கும்பகோணம் பழைய மீ்ன் மார்க்கெட்டை  வணிக வளாகமாகவும், வெளியூர் பக்தர்கள்  தங்கிச் செல்ல ஏதுவாக சாக்கோட்டை சாலை யில் உள்ள நாகேஸ்வரன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் தங்கும்  விடுதி கட்ட வேண்டும். திருநாகேஸ்வரத்தில் புதிய காவல் நிலையம் அமைக்க வேண்டும்  என்பன உள்பட 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் வழங்கினார். இதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் தமிழக முதல்வருக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார்.

;