பாபநாசம், அக்.23 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் பயணிகள் சங்கச் செயலர் சரவணன் விடுத் துள்ள செய்திக் குறிப்பில், “தீபாவளி பண்டி கையை முன்னிட்டு அகமதாபாத்தில் இருந்து சூரத், புனே, சென்னை, விழுப்புரம், மயிலாடு துறை வழியாக திருச்சிக்கு சிறப்பு விரைவு ரயிலை (வண்டி எண்: 09419/09420) ரயில்வே நிர்வாகம் இயக்க உள்ளது. இந்த வண்டி இரு மார்க்கங்களிலும் பாபநாசத்தில் நின்று செல்லும். இந்த ரயில் வருகிற அக்டோபர் 30, நவம் பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக் கிழமைகள்) திருச்சியிலிருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு, பாபநாசத்திற்கு காலை 7.25-க்கு வந்து சேரும். பின்னர் சென்னை வழியாக அகமதாபாத்திற்கு புறப்படும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 29, நவம்பர் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகள்) சென்னையில் இருந்து மாலை 4.25 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45-க்கு பாபநாசம் வந்து சேரும். இந்த வண்டியின் மூலம் சென்னை, திருப்பதி (ரேனிகுண்டா), புனே (மும்பை), சூரத் வழியாக அகமதாபாத் போன்ற ஊர் களுக்கு செல்லலாம். சீரடி மற்றும் ராக வேந்திரர் மடம் அமைந்துள்ள மந்திராலயம் செல்லும் பக்தர்களுக்கு இந்த ரயில் இணைப்பு வண்டியாக இருக்கும். மேலும், தற்சமயம் சிறப்பு ரயிலாக இயக்கப்பட உள்ள இந்த வண்டிக்கு கிடைக்கும் பயணிகளின் வரவேற்பை பொறுத்து நிரந்தரமாக்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.