districts

img

50 ஆயிரம் கண்ணாடி பாட்டில்கள் குவிப்பு: தனியார் நிறுவனத்துக்கு நோட்டீஸ்

தஞ்சாவூர், ஜூன் 7- தஞ்சாவூரில் டெங்கு கொசுப் புழு உற் பத்தியாகும் விதமாக 50 ஆயிரத்துக்கும் அதிகமான கண்ணாடி பாட்டில்களை குவித்து வைத்த தனியார் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் வழங்கி யது.

தஞ்சாவூர் மாநகரில் ஆணையர் இரா. மகேஸ்வரி அறிவுறுத்தலின்படி, டெங்கு கொசுப் புழு ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும்  தூய்மைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இந்நிலையில், தஞ்சாவூர் மகர் நோன்புசாவடி ஆடக்காரத் தெருவில் மாநகர் நல அலுவலர் வீ.சி. சுபாஷ் காந்தி கடந்த வாரம்  டெங்கு கொசுப் புழு ஒழிப்பு தொடர்பாக ஆய்வு  செய்தார்.

அப்போது, மூடப்பட்டிருந்த தனியார் கண்ணாடி பாட்டில் நிறுவனத்தில் 50 ஆயிரத் துக்கும் அதிகமான கண்ணாடி பாட்டில்கள் கொசுப்புழு உற்பத்தியாகும் விதமாக குவித்து  வைக்கப்பட்டிருந்தன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்துமாறு தனியார் நிறுவன உரிமை யாளருக்கு மாநகராட்சி அலுவலர்கள் நோட் டீஸ் வழங்கினர். இதைத் தொடர்ந்து, கண்ணாடி  பாட்டில்கள் அகற்றப்பட்டதை மாநகர் நல அலு வலர் உள்ளிட்டோர் வியாழக்கிழமை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர். 

இதுபோல, டெங்கு கொசுப் புழு உற்பத்தி யாகும் கலன்கள் திறந்த வெளியில் போடப் பட்டிருந்தால், தொடர்புடைய நிறுவனங்களுக்கு  நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என மாநகர் நல அலுவலர் தெரிவித்தார்.

 

;