districts

img

தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இளைஞர் கூட்டங்கள்

திருச்சி, மே 3- தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர் கூட்டங்கள் நடத்துவதென வாலிபர் சங்க சைக்கிள் பிரச்சாரப் பயண நிறைவு  பொதுக்கூட்டத்தில் அறைகூவல்விடப்பட்டுள் ளது. சென்னை, கோயம்புத்தூர், பாண்டிச்சேரி, கன்னியாகுமரி  ஆகிய நான்கு  முனைகளிலிருந்து இளைஞர்களுக்கு  வேலை  கொடு என்ற ஒற்றை முழக்கத்தோடு சுமார் 200 இளைஞர்கள் 3000 கிலோ மீட்டர் தூரம் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் சைக்கிள்  பயணம் மேற்கொண்டு உழைப்பாளர் தினமான மே 1 ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில் சங்க மித்தனர்.

சைக்கிள் பயணக் குழுவினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு, மாணவர்  சங்கம் உள்ளிட்ட பல்வேறு வர்க்க வெகுஜன அமைப்புகளின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஞாயிறு மாலையில் திருச்சி ராப்பள்ளியில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலத் தலைவர் என். ரெஜிஸ் குமார் தலைமை வகித்தார்.  பொதுக் கூட்டத்தில் வாலிபர் சங்க அகில இந்திய செயல் தலைவர் ஏ. ஏ. ரஹீம், சிஐடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராசன்,  சங்கத்தின் பொருளாளர் சிங்கரவேலர், பாலசந்திரபோஸ் ஆகியோர் உரையாற்றி னார்கள். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் கே. சாமுவேல்ராஜ், வரவேற்புக்குழு தலைவர்  எஸ்.ஸ்ரீதர், இடதுசாரி கட்சித் தலைவர் ராஜா, வெற்றி, வாலிபர் சங்க திருச்சிரப்பள்ளி மாவட்டச் செயலாளர் லெனின் உள்ளிட்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். சைக்கிள் பிரச்சாரத்தில் கலந்துகொண்டவர்களுக்கு ஏ.ஏ. ரஹீம் கைத்தறியாடை அணிவித்து கௌர வித்தார்.  கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலாளர் எஸ். பாலா, 3000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்த குழுவிற்கு தமிழகத்தில் நான்கு முனைகளிலிருந்து சிறப்பான வரவேற்பும் பாராட்டும் அளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த பயண அனுபவத்தில் ஒவ்வொரு மாவட்டங்களில் உள்ள சமூக, பொருளாதாரச் சூழல் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் குறித்து சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் உண்மையிலேயே ஆக்கப்பூர்வமானது மட்டுமல்ல செயல் படுத்துவதற்கான காரிய சாத்தியமானதே என்பதை நாங்கள் உளப்பூர்வமாக உணர்ந்துள்ளோம்.

இன்றைக்கு தமிழகத்தில் வேலை வாய்ப்பின்மை 4.4 சதவீதம்  என தரவுடன் தெரிவித்துள்ளனர். தரவுகள் ஒருபுறத்தில் சரியாக இருப்பது போல் தோன்றினாலும் இதைவிட வேலைவாய்ப்பின்மை அதிகமாகவே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி, கல்லூரிகளில் படித்து வெளியேறும் எண்ணி க்கை 12 லட்சமாக உள்ளது. எங்களுக்கு கிடைத்த  தகவலின் அடிப்படையில் வேலை வாய்ப்பு  அலு வலகங்களில் வேலை கேட்டு பதிவு செய்திருப்ப வர் எண்ணிக்கை 75 லட்சம். எனவே எனவே தமிழக அரசு வேலை வாய்ப்பின்மை குறித்த முழுமையான தரவுகளை கண்டறிய உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.  இன்றைய சூழலில் தமிழகத்தில் காகித உற்பத்தியை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. கரும்பிலிருந்து எத்தனால், மின்சாரம் தயாரிப்பதற்கான வாய்ப்புகளும் பழங்களை பதப்படுத்தி பழச்சாறு தொழிற்சாலை யை துவக்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. இதனை முதல் நடவடிக்கையாக மேற்கொண்டால் சில ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

 தவிர ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவளம், பொருளாதார வளம் ஆகியவற்றை ஆய்வு செய்து அதற்கேற்ப தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தை நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.  ஒன்றிய மோடி அரசு கொரோனாவை காரணம் காட்டி  இளைஞர்களின் வேலை யின்மை குறித்து கவலைப்படவில்லை. கொரோனா காலத்தில் இந்தியா முழுவதும்  ஏழரை கோடி சிறு - குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இதற்கு தமிழகமும் விதிவிலக்கு அல்ல  பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வேலையின்மை, பொருளாதார மேம்பாடுகள் குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற இளைஞர் அமைப்புகள் கேள்வி எழுப்பினால் மோடி அரசு பதிலளிக்க முடியாமல்  மத மோதலை உருவாக்கி மக்களையும், இளைஞர்களையும் மாணவர்களையும் திசை  திருப்புகிறது. இந்த தருணத்தில் 4 முனை களிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சைக்கிள் பயணம் வெகு விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்கள், நகர்ப்புறங்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கிராம இளைஞர் கூட்டங்களை நடத்த வாலிபர் சங்கம் முடிவு செய்துள்ளது  இதன் மூலம்  வேலை வாய்ப்பின்மைக்கு எதிரான  குரலை தமிழக இளைஞர்கள் எழுப்ப உள்ளனர்.

 ஒன்றிய அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்து இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு போதுமான உதவிகளை செய்யவேண்டும் தமிழக முதல்வரும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கக் கூடிய வகையில் தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும் என்றார். மேலும் அவர் கூறுகையில் ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தமிழக மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரி விக்கின்றது. அதேபோல் தபால்துறை உள்ளிட்ட  பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களுக்கு ஒதுக்கீடு வழங்காமல் மோடி அரசு புறக்கணிப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது என்றார். மாநிலத் தலைவர் என். ரெஜிஸ்குமார் பேசுகையில் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சீவலப்பேரி சுப்பிரமணியன் குடும்பத்திற்கு இதுவரை மோடி அரசு எந்த உதவியும் செய்யவில்லை.ஆனால்  இறந்தவர்களின் படத்தை பிளக்ஸ், பேனர்களை அடித்து விளம்பரம் மட்டும் தேடிக்கொண்டனர். சுப்பிர மணியனின் தாய் தந்தையர் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளனர். முதியோர் பென்சன் கூட கிடைக்கவில்லை என தெரிவித்தனர். சுப்பிர மணியன் குடும்பத்தை பாதுகாப்பதற்கு தமிழக  முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  சுப்பிரமணியன் குடும்பத்தை மட்டும் அல்ல இந்த நாட்டையே மோடி கைவிட்டுவிட்டார். நாட்டை கார்ப்பரேட்டுகள் கையில் கொடுத்து விட்டார்.  வருடத்திற்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவோம் என்று கூறியது ஒரு நாடகமே என்று கூறினார்.

 சங்கத்தின் மாநில நிர்வாகிகளில் ஒருவரான பாலசந்திரபோஸ் பேசுகையில், தமிழகத்தில் தபால் துறையில் போலி சான்றிதழ் கொடுத்து வடமாநிலத்தவர் பணியில் சேர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. இது மட்டுமல்ல 10 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஊழியர்களின் சான்றிதழ்களை தமிழக அரசு முழு ஆய்விற்கு உட்படுத்த வேண்டும். திருப்பூரில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் இளை ஞர்கள் வேலையின்றி கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். பனியன் அயனிங் செய்யும் தொழிலாளிக்கு அயனிங் செய்வதற்கு ஒரு ரூபாய் 50 காசாக இருந்தது. கடும் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை நகரம் நெருக்கடி சந்தித்து வரும் நிலையில் பல தொழில் நிறுவனங்கள் பனியன் அயனிங்குக்கு  கொடுத்துவந்த ஒரு ரூபாய் 50 பைசா கூலியை 60 பைசா, 50 பைசா ஆகக் குறைத்து விட்டனர். இதுமட்டுமல்ல நாமக்கல்லில் விசைத்தறி தொழில் அனேகமாக காலியாகிவிட்டது. இதற்கு காரணம் மோடி அரசின் தவறான கொள்கை களே. 150 ரூபாய்க்கு பருத்தி ஏற்றுமதி செய்துவிட்டு 250 ரூபாய்க்கு இறக்குமதி செய்வதுதான் நாமக்கல் பகுதியில் விசைத்தறி அழிந்ததற்கு காரணம். இதில் பிரதான குற்றவாளி மோடியே என்றார்.

படங்கள் - ஜெ. பொன்மாறன், 
செய்தி - ச. நல்லேந்திரன்.