districts

சென்னை முக்கிய செய்திகள்

மூதாட்டி கொலை  வழக்கில் இளைஞர் கைது

சென்னை, மார்ச் 20- திருவான்மியூர் ரெங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா (90). இவர்  கணவர் பக்கிரிசாமி கடந்த 2005ஆம் ஆண்டு இறந்துவிட்டார். சரோஜாவின் மகன், மயி லாப்பூரில் வசிக்கிறார். இதனால் சரோஜா, இங்கு தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் அடுத்த நாள் காலையில் சரோஜா, வீட்டுக்குள் பலத்த காயங்களுடன் கிடந்துள்ளார். இதைப் பார்த்து பக்கத்து வீட்டினர், சரோஜாவை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சரோஜா, செவ்வாய்க்கிழமை இரவு இறந்தார். இது தொடர்பாக திருவான்மியூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில் அந்தப் பகுதியில் உள்ள சூப்பர் மார்க் கெட்டில் வேலை செய்யும் அம்பத்தூர் நாராயணா நகரைச் சேர்ந்த பிரேம்குமார் (27)  என்பவர்தான் சரோஜாவை தாக்கியது தெரியவந்தது. மேலும் சம்பவத்தன்று அளவுக்கு அதிக மான மதுபோதையில் இருந்த பிரேம்குமார், தான் பணிபுரியும் சூப்பர் மார்க்கெட் உரிமை யாளர் வீட்டிற்கு செல்வதற்கு பதிலாக, தவறு தலாக சரோஜா வீட்டுக்குள் சென்றதும், அப்போது அங்கிருந்த சரோஜா பிரேம் குமாரை கண்டித்ததும், இதில் ஏற்பட்ட தக ராறில் பிரேம்குமார் சரோஜாவை தாக்கி விட்டு தப்பி ஓடியதும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் பிரேம்குமாரை புதன்கிழமை கைது செய்த னர்.

வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாள பயிற்சி 

திருவள்ளூர், மார்ச் 20- வரும் நாடாளுமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு  இயந்திரத்தை கையாளும் முறை குறித்து தேர்தல் அலுவலர்களுக்கு பொன்னேரியில் புதனன்று (மார்ச் 20), பயிற்சி நடைபெற்றது. வாக்குச்சாவடி இயந்திரம் செயல்படும் முறை, கையாளும் விதம், இயந்திரங்களை சீல் வைத்து வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்புதல் வரை எவ்வாறு இயந்திரத்தை கையாள்வது என்பது குறித்து பொன்னேரி துணை ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் முன்னிலையில் பயிற்சி அளிக்கப்பட்டது.  இதில் பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், பொன்னேரி சாராட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ்,தேர்தல் தனி வட்டாட்சியர் கனகவல்லி, மண்டல துணை வட்டாட்சியர் கந்தன்,சாராட்சியரின் நேர்முக எழுத்தர் செல்வேந்திரன் ஆகியோர் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட சிபிஐ துணைச் செயலாளர் மீது பொய் வழக்கு 

திருவள்ளூர், மார்ச் 20-  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரு வள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் ஜெ.அருள் மீது,  சரித்திர பதிவேடு குற்றவாளி என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதை,  ரத்து செய்ய வேண்டும்  என தமிழ்நாடு முதலமைச்சரை, கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டியை அடுத்த எளாவூர் பகுதியை சேர்ந்தவர் ஜெ.அருள். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கும்மிடிப்பூண்டி அதை சுற்றியுள்ள இருளர் இன மக்கள் மற்றும் அனைத்து சமுக மக்கள்  பிரச்சினைகளுக்காக பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளார். இந்த நிலையில் அருள் மீது சில முதலாளிகள் பொய் வழக்கு கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அருள் மீது கும்மிடிப்பூண்டி அருகிலுள்ள ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன்  சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

வர்த்தக நிர்வாகம் குறித்த  நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு 

சென்னை: மார்ச் 20-  பிசினஸ் பிராசஸ் மேனேஜ்மென்ட் (பிபிஎம்) மற்றும் வாடிக்கையாளர் அனுபவ தீர்வுகள் துறையில் உலகளவில் முன்னணி வகிக்கும் ஃபியூஷன் சிஎக்ஸ் இந்தியச் சந்தையில் அதன் விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், சென்னையில் அதன் முதல் அலுவலக வளாகத்தை தொடங்கியுள்ளது.   இதன்மூலம் தென்னிந்தியச் சந்தையில் சேவை வழங்கலை மேம்படுத்துவது மற்றும் வேலைவாய்ப்புகளை உயர்த்துவது என்பதில் உறுதிபூண்டிருக்கும் இந்நிறுவனம், இரு ஷிஃப்டுகளில் 650 பணியாளர்கள் பணியாற்றும் திறனுடன் 350 இருக்கைகள் கொண்ட பணி வளாகத்தை சென்னை அம்பத்தூரில் திறந்திருக்கிறது.   சென்னை வளாகத்திற்காக 150 பணியாளர்களை இந்நிறுவனம் ஏற்கனவே தேர்வு செய்துள்ளது.  ஜுன் மாதத்தின் 3 வது வாரத்திற்குள் மேலும் 500 பணியாளர்களை தேர்வுசெய்ய திட்டமிட்டுள்ளது என்று இந்நிறுவனத்தின் செயலாக்க துணைத்தலைவர்  அமிதாப் வார்தக் கூறினார்.

திருவள்ளூரில்  ரூ.17.89 லட்சம் பறிமுதல்

திருவள்ளூர், மார்ச் 20- ஆந்திரா மாநிலம், திருப்பதியைச் சேர்ந்தவர் சீனிவாச ரெட்டி (55) இவர் தனது பெண்ணின் திருமணத்திற்காக நகை வாங்க  17 லட்சத்தி 89 ஆயிரத்து 80 ரொக்கப் பணத்தை எடுத்துக் கொண்டு திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருவள்ளுவர் அடுத்த சிறுவனூர் பகுதியில் புதனன்று (மார்ச் 20), தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட ரொக்கத்தை  பறிமுதல் செய்தனர்.

பாஜக அலுவலகத்தை மூடிவிட்டு  தலைவர்கள் ஓட்டம்

திருவள்ளூர், மார்ச் 20- பொன்னேரியில் பாஜக சட்டமன்ற தொகுதி அலுவலகம் புதனன்று (மார்ச் 20), திறக்கப்பட்டது. இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம்  உரிய அனுமதி பெறவில்லை. இதனால் அந்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் வந்த போது பாஜக நிர்வாகிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திரு வேங்கடபுரம் பகுதியில் பாஜக சட்டமன்ற அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. கட்சியின் மாநில துணைத்தலைவர் சக்கரவர்த்தி இதில் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். பாஜக கட்சி கொடி யுடன் கட்சி அலுவலகம் திறப்பு விழா குறித்து தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பாஜக நிர்வாகிகளிடம் உரிய அனுமதி பெறாமல் அலுவலகத்தை எப்படி திறக்கலாம் என கேள்வி எழுப்பி னர். கட்சி அலுவலகத்திற்கு எதற்கு அனுமதிவாங்கவேண்டும் என அந்த அதிகாரியிடம் பாஜக நிர்வாகிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் தேர்தல் அலுவலகம் திறக்கவில்லை. கட்சி அலுவலகம் தான் திறக்கிறோம் எனக் கூறிய போது, கட்சி அலுவலகமாக இருந்தாலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள சூழலில் கட்சி கொடிகள் கட்டியும், பேனர்கள் வைத்து மைக் செட் போடப்பட்டு இருப்பதற்கு உரிய அனுமதி பெற்றீர்களா என தேர்தல் அதிகாரிகள் கேள்வி எழுப்பினார். அப்போது பாஜக நிர்வாகிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கலைந்து செல்வதாக பாஜக நிர்வாகிகள் கூறிவிட்டு அலுவலகத்தை பூட்டி விட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். 

கட்சியில் இருந்து நீக்கம்

சென்னை, மார்ச் 20 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதி, எம்ஜிஆர் நகர் வடக்கு கிளை உறுப்பினரான எம்.தயாளன் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடு பட்டதால் கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சி யின் விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழிசைக்கு தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவர்:  புதுச்சேரி சிபிஎம்

புதுச்சேரி, மார்ச் 20- புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் ராஜினாமா செய்ததின் மூலம் அந்த பதவியின் மரியாதை பாது காக்கப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கூடுதல் பொறுப்பு வகித்த  தமிழிசை சவுந்த ராஜன்  தனது பதவியை ராஜி னாமா செய்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கே  என்றாலும் அரசியல் அமைப்புச் சட்டம் மற்றும் துணைநிலை ஆளுநர்  பதவியின் மரியாதை பாது காக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. மாநில  மக்களும் இதை வரவேற் கிறார்கள். 2021 பிப்ரவரி 17ல் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் கூடுதல் பொறுப்பேற்றது முதல் ராஜினாமா செய்யும்  வரையில் மக்களாட்சியை புறந்தள்ளி போட்டி ஆட்சியை நடத்தி வந்தார்.  ஒன்றிய அரசின் முகவ ராக, பாஜகவின் அரசியல்  நடவடிக்கையை விடாப்பிடி யாக முன்னெடுத்து வந்தார்.  மூடிய ரேசன் கடைகள், மின்துறை தனியார் மயம் ,  புதிய கல்விக் கொள்கை, மத அடிப்படை வாத தொண்டு நிறுவனத்தின் கீழ் மாணவர் மதிய உணவு திட்டம் ஆகியவற்றை நியாயப்படுத்துவது, மாநில உரிமை தீர்மானத்தை காலம் கடந்து ஒன்றிய அரசுக்கு பரிந்துரைப்பது என மக்கள் நலன், மாநில  நலனுக்கு எதிராக செயல் பட்டு வந்தார். தேர்தலில் போட்டியிடும் அவரது முடிவு, துணை நிலை ஆளுநர்  பொறுப்பில் இருந்து கொண்டு சொந்த அரசியல் பணிக்கு, மீண் டும் புதியதொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிகி றது. ஆனால் அவரின் செயல் பாட்டை அறிந்த தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டு வார்கள். புதுச்சேரி மக்கள்  ஆளுநர் பதவியின் மரியாதை பாதுகாக்கப்பட் டுள்ளதாக உணர்ந்திருக் கிறார்கள். அந்த வரிசையில்  தமிழிசையின்  ராஜினா மாவை சிபிஎம்  வரவேற்கி றது.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில்  ரூ.30 லட்சம் பறிமுதல்

விழுப்புரத்தில்  ரூ.30 லட்சம் பறிமுதல் விழுப்புரம், மார்ச் 20- விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையம் சோதனை சாவடியில் தேர்தல் கண்காணிப்பு குழு உரிய ஆவணங் களின்றி ரூ.30 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து  கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். விழுப்புரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் கண் காணிப்பு குழு வாகனங்களை தொடர்ந்து ஆய்வு  மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதனன்று கெங்கராம்பாளையம் சோதனைச் சாவடியில் கண்காணிப்பு  குழு 3 அலுவலர் சக்திவேலு தலைமையிலான குழுவி னர் அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.30 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக அதனை கைப்பற்றிய கண்காணிப்பு குழுவினர் (ஆர்டிஓ) உதவி தேர்தல் அலுவலர் காஜா சாகுல் ஹமீதிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் விழுப்புரம் மாவட்டம், தென்னவராயன் பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் அன்பழகன்(33) இவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் எப்போதும்போல் கல்லூரியில் வசூல் செய்தரூ.30 லட்சத்தை காரில் எடுத்துக் கொண்டு, விழுப்புரத்தில் உள்ள தனியார் வங்கியில் டெபாசிட் செய்வதற்காக எடுத்துச்  சென்றது தெரியவந்தது. அதன்பின்னர் உரிய ஆவணங்களை காண்பித்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ள தேர்தல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கிராம சாலை கேட்டு சிபிஎம் போராட்டம் வெற்றி

கிராம சாலை கேட்டு சிபிஎம் போராட்டம் வெற்றி திருவண்ணாமலை, மார்ச் 20- திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுகா அரியாகுஞ்சூர் கிராமத்திற்கு சாலை கேட்டு, 60 ஆண்டுகால கிராம மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  கடந்த டிச.27 அன்று நடைப்பயணம் நடை பெற்றது. அப்போது நடை பெற்ற பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் சாலை அமைத்து தருவதாக உறுதி அளித்தனர். 2 வருட மாக பலகட்ட அதிகாரி களை, மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சந்தித்து போராடி பெற்ற சாலைக்கு, புதனன்று (மார்ச் 20) ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப் பீட்டிலான சாலை பணி துவங்கியது. சிபிஎம் போராட்டம் வெற்றி பெற்றதையொட்டி  பொதுமக்கள், தோழ மைக் கட்சியினர் சார்பில்,  சிபிஎம் வட்டார செயலா ளர் ஏ. லட்சுமணன் மற்றும்  மாவட்ட குழு உறுப்பினர்  சிஎம்.பிரகாஷ் ஆகியோர் களுக்கு சால்வை அணி வித்து நன்றி தெரிவித்தனர். சாலை அமைப்பதற்கு பெரிதும் உதவிய செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மாவட்ட வனத் துறை அலுவலர் ஆகியோ ருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

திமுக தேர்தல் அறிக்கையில்  வடசென்னைக்கு 6 முக்கிய அறிவிப்புகள்

சென்னை, மார்ச் 20- நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட் டது. தேர்தல் அறிக்கையை திமுக தலைவ ரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதில் வட சென்னைக்கான 6 முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன. கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ராஜாஜி நகர் மக்கள் பயன்பெறும் வகையில் வில்லிவாக்கம் ரயில் நிலையத் தில் இருந்து தெற்கு பக்கம் செல்வதற்கு சுரங்க நடைபாதை அமைக்கப்படும். சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து அம்பத்தூர் தொழிற் பேட்டை வரை மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படும். விம்கோ முதல் எண்ணூர் வரை மெட்ரோ ரயில் நீட்டிக்கப்படும். திரு வொற்றியூர் மக்களின் நீண்ட கால கோரிக் கையான திருவொற்றியூர் விம்கோ நகர் ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் மூலம் தரம் உயர்த்தி, வடக்கில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் விம்கோ நகரில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். மணலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலை மாசுகளால் ஏற்படக்கூடிய நோய்களை தீர்க்கும் வகையில் இந்த பகுதி யில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் வசதிக்காக சென்னையில் 3வது ரயில் முனை யம் அமைக்கப்படும். தென்சென்னை வேளச்சேரிக்கும் - தோமையர் மலை ரயில் நிலையத்திற்கும் இடையில் தாமத மாகி வரும் ரயில் திட்டம் விரைந்து முடிக் கப்படும்.

வாடகைக்கு வீடு எடுத்து  போதை மாத்திரை விற்பனை 6 பேர் கைது

வாடகைக்கு வீடு எடுத்து  போதை மாத்திரை விற்பனை 6 பேர் கைது சென்னை, மார்ச் 20- வாடகைக்கு வீடு எடுத்து ஆன்லைனில் போதை மாத்திரை விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்ட னர். சென்னை காசிமேடு ஜி.எம்.பேட்டை பகுதியில் வீட்டில் போதை மாத்திரை கள் வைத்து விற்பனை செய்வதாக காசிமேடு காவல் துறையினருக்கு ரகசி யத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த வீட்டை சோதனை செய்ததில் சுமார் 1,900 போதை மாத்திரை கள் இருப்பது தெரிய வந்தது. காவல் துறை விசார ணையில் காசிமேட்டை சேர்ந்த ரவுடி மதனின் மனைவி மசியா (19) வீட்டை வாடகைக்கு எடுத்து ஆன் லைன் மூலம் மாத்திரைகள் வாங்கி தனது கூட்டாளி களான பிரதீப்  (21),  பாண்டு  (19), பரத்குமார்  (22), சாம் சன்(23),  பிரகாஷ் (23) ஆகிய 6 பேரும் சேர்ந்து விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் 6 பேரை யும் கைது செய்தனர்.

சொத்து தகராறில் தந்தையை  கொலை செய்த மகன் கைது

சொத்து தகராறில் தந்தையை  கொலை செய்த மகன் கைது சென்னை, மார்ச் 20- சென்னை வில்லிவாக்கத்தில் சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார். ராஜமங்கலம் 6ஆவது தெருவைச் சேர்ந்தவர் மது சூதனன் (68). இவர் மகன் ம.ஜார்ஜ் புஷ் (34). காவல் துறையின் ரவுடி பட்டியலில் இருக்கும் ஜார்ஜ் புஷ், தனது தந்தையிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கேட்டுள்ளார். ஆனால் மதுசூதனன், வீட்டை எழுதி கொடுக்க மறுத்து வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜார்ஜ் புஷ், செவ்வாயன்று இரவு மது போதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வாசலில் அமர்ந்திருந்த மதுசூதனிடம், வீட்டை எழுதிக் கேட்டு தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே, அங்கிருந்த இரும்பு கம்பியால் தந்தையை தாக்கியுள்ளார். மேலும் வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளையை எடுத்து வந்து மதுசூதனன் தலையில் ஜார்ஜ்புஷ் போட்டு ள்ளார். மதுசூதனன் அலறல் சத்தத்தை கேட்டு அங்கி ருந்த மக்கள், அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு  செல்ல முயன்றனர்.  ஆனால் சம்பவ இடத்திலேயே  மதுசூத னன் இறந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  வில்லிவாக்கம் காவல் துறையினர் மதுசூதனன் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, ஜார்ஜ் புஷை கைது செய்தனர்.

அரக்கோணம் - காஞ்சிபுரம்- செங்கல்பட்டு வழித்தடம் இருவழிப்பாதையாக்கப்படும் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

சென்னை,மார்ச்20- திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் பொன்னேரி வட்டம், புழல் ஊராட்சி ஒன்றி யத்தில் அமைந்துள்ள புள்ளையன் ஊராட்சி, செங்குன்றம் பேரூராட்சியை ஒட்டி தேசிய நெடுஞ்சாலை என்எச் 5 இல் அமைந்துள் ளது.  அங்கு சாலையைக் கடக்க உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள் ளது. அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள இதர சென்னையை சுற்றியுள்ள பகுதிகளுக் கான இதர அறிவிப்புகள் வருமாறு:  பழவேற்காடு முதல் கடப்பாக்கம் இடையே மேம்பாலம் அமைத்துப் புதிய சாலை அமைக்கப்படும். திருப்பெரும்புதூர் முதல் கரைப்பேட்டை வரை 6 வழி சாலை அமைக்கப்படும். திருப்பெரும்புதூர் மக்க ளவைத்  தொகுதியில் பூந்தமல்லி நெடுஞ் சாலை- தா.பி.சத்திரம் பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி காரணமாக சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சிரமத்தை போக்கும் வகையில் நடை  மேம்பாலம் அமைக்கப்படும். இருவழிப்பாதை திருப்பெரும்புதூர் முதல் கவரைப் பேட்டை வரையிலான தேசிய நெடுஞ் சாலை (என்.எச்.48 கி. மீ. 37.000 முதல் கி. மீ . 71.015 வரை )ஆறு வழிச்சாலை களாக மாற்றும் திட்ட பணி விரைந்து முடிக்கப்படும். சென்னை சென்ட்ரல், சென்னை எழும்பூர் ரயில்வே முனையத்தில் நிலவும் நடை மேடை பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில், மாற்று வழித்தடமாக அரக் கோணத்தில் இருந்து செங்கல்பட்டிற்கு காஞ்சிபுரம் வழியாகச் செல்லும் ரயில் பாதை இருவழிப் பாதையாக மாற்றப்படும். காஞ்சி புரம் கிழக்கு ரயில்வே நிலையத்தில் செயல் படும் பலதரப்பட்ட சரக்குப் போக்குவரத்தும், ஆசியாவின் மிகப்பெரிய ஆட்டோ மொபைல் சரக்கு முனையமாகச் செயல் படும் போக்குவரத்தும் மேலும் மேம்படுத் தப்படும். காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டார மக்களின் பன்மடங்காகப் பெருகிவரும் பயணத் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் மின்சார ரயில் சேவை வழங்க வலி யுறுத்தப்படும் .  தடுப்பூசி உற்பத்தி மையம்  செங்கல்பட்டு தடுப்பு மருந்து உற்பத்தி துவங்கப்படும்.செங்கல்பட்டில் உள்ள ஒருங்கிணைந்த நோய்த் தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தை மேம்படுத்தி, உற்பத் தியைத் தொடங்குவதற்கு உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளன.