districts

img

எண்ணூர் நிலக்கரி முனைய தொழிலாளர்கள் பணிநிரந்தரம் கேட்டு ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், டிச 22-  திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகில் உள்ள காமராஜர் துறைமுகம் n ஜ.எஸ்.டபிள்யு ஆலையில் 200க்கும் மேற்பட்டோர் கடந்த10 ஆண்டு காலமாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தங்களை  பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தொழிலாளர்களிடம் பிடிக்கும் பிஎப் பணத்திற்கு முறையாக பிடித்தம் செய்வதை தொழிலாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்,  12-மணி  வேலை நேரத்தை  8 மணி நேரமாக  குறைக்க வேண்டும், நிலக்கரி தூசியில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த வேண்டும், பணியின்போது இறந்த தொழிலாளர்கள்  ஆர்.மணிகண்டன் , ஆர்.ராஜசேகர் ஆகியோருக்கு வழங்க வேண்டிய நஷ்ட ஈட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,   உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நிலக்கரி முனையம் எதிரில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.விஜயன் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் ஜி.விநாயகமூர்த்தி, எஸ்.நரேஷ்குமார், கிளை நிர்வாகிகள்  ஏ.மெகபூப் ஷெரிப்,  என்.சுந்தர் ஜி.தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பேசினர்.

;