தாம்பரம் மாநகராட்சி ஜிஎஸ்டி சாலையில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனு மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது. இம்முகாமில் குறு சிறு மற்றும் நடுத்தர தெழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, மாநகராட்சி ஆணையர் அழகுமீனா, சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.