ராணிப்பேட்டை. பிப்,15- ராணிப்பேட்டை நகராட்சி 4-வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தா.வெங்கடேசன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். தேர்தல் பணி தொடங்கியது முதல் வார்டு முழுவதும் வீடு வீடாக சென்று பெண்கள், இளைஞர்கள், வணி கர்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். எம்ஜிஆர் நகர் உதயக்கரை பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் வீடில்லாத மக்க ளுக்கு வீட்டுமனைப் பட்டா பெற்றுக்கொடுக்கவும், ரயில்வே லைனில் வாகனங்கள் கடந்து சென்று வர வசதியாக ரயில்வே கேட் அமைத்து தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார். உதயக்கரை பகுதியில் தனியார் கட்டடத்தில் வாடகையில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்திற்கு சொந்தமாகக் கட்டடம், மாணவர்கள் போட்டி தேர்வுக்கு தயாராக புதிய தாக நூலகம் அமைத்துக் கொடுக்க வும், அரசின் உதவி திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள், தனி பெண்கள், முதியோர் உதவித்தொகை தகுதி யுடையவர்களுக்கு பெற்றுத் தரப்படும் என்றும் சிபிஎம் வேட்பாளர் கூறினார். நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைம் அனைத்து வசதிகளும் கொண்ட 24 மணி நேரம் மருத்துவமனையாக செயல்படும் வகையில் தரம் உயர்த்த பாடுபடுவேன். நகராட்சியில் செயல்படாமல் இருக்கும் மின் மயானத்தை சீரமைத்து, அமரர் ஊர்தி சேவை ஏற்படுத்தப்படும். நகரின் முகப்பில் உள்ள ராஜா தேசிங்கு ராணி ஆகிய நினைவுச் சின்னங்களை புனரமைத்து பொது மக்கள் வந்து செல்லும் சுற்றுலா தளமாக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அவர் அளித்தார். இந்த பிரச்சாரத்தில் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், அமைப்புக்குழு உறுப்பி னர்கள் ஆர்.மணிகண்டன், எல்சி.மணி, என்.ரமேஷ், ஆர்.திலகா, மற்றும் பெல் கிளை உறுப்பினர்கள் கலை வாணன், சிலம்பரசன், பத்ம ஞானஸ்கந்தன் ஆதரவாளர்கள் பழனி, தனுஷ்கோடி, சரவணன், ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.