திருவள்ளூர், மார்ச் 9- மதவெறி பாஜக-விடமிருந்து இந்தியாவின் ஒற்றுமையை பாதுகாக்கும் கடமை, பழங்குடி மக்கள் உள்ளிட்டு அனைத்து சமுக மக்களுக்கும் உள்ளது என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு வேண்டு கோள் விடுத்தார். 18 வது நாடாளுமன்ற தேர்தலில் பழங்குடி மக்களின் சவால்களும் - கடமைகளும் என்ற தலைப்பில் திருவள்ளூரில் சனிக்கிழமையன்று (மார்ச் 9), தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜி.சின்னதுரை தலைமை தாங்கினார்.இதில் மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் ஏ.வி.சண்முகம், மாநில துணைத்தலைவர் இ.கங்காதரன், மாவட்ட நிர்வாகி ஆறுமுகம் ஆகியோர் பேசினர் இதில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் பி.டில்லி பாபு பேசும் போது, இந்தியாவை கடந்த 10ஆண்டுகள் ஆட்சி செய்த பாஜக அரசு, இந்திய அரசியல மைப்புசட்டம் வழங்கியுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகம், சமூக நீதி, கூட்டாட்சி கோட்பாடுகள் மற்றும் பொருளாதார இறையாண்மை தகர்த்துள்ளது. ஆதிவாசி மக்களுக்கு எதிரான வன உரிமை திருத்த சட்டம் கொண்டு வந்து அம்மக்களின் வாழ் வாதாரத்தை சூரையாடி வந்துள் ளது. 100 நாள் வேலை திட்டத்தில் நிதி குறைத்ததின் மூலம் மக்களை வறுமையில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பல்லாயி ரம் ஆண்டுகள் பழங்குடிகளின் வாழ்விடமாக, தாய் மண்ணாக இருந்த நிலங்களை பறிக்க, பழங்குடி மக்களின் உயிர் உடமை கள், வழிபாட்டுத்தலங்கள், வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளது. பெண்கள், குழந்தை கள், முதியவர்கள் கொல்லப்பட்ட னர். பாலியல் வன்முறை, பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் என பழங்குடியின பெண்ணுக்கு பாது காப்பு இல்லை. கனிமவளத்தை கொள்ளையடிக்க வரலாறு காணாத வகையில் கலவரங்களை பாஜக அரசு மேற்கொண்டு வரு கிறது. சிறுபான்மை, பட்டியல் இன, பழங்குடி மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் நடத்துகிறது. மேலும் பிளவு அரசியலை, வெறுப்பு அரசியலை நடத்தி வரும் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். மதவெறி, இந்துத்துவா, கார்ப்பரேட் கள்ளக் கூட்டணியை முறியடிக்க இந்திய ஒற்றுமையை பாதுகாக்கும் கடமை, பழங்குடி மக்கள் உள்ளிட்டு அனைத்து சமுக மக்களுக்கும் உள்ளது என்றார். ஆசிரியர்களுக்கு பாராட்டு திருவள்ளூர் அருகில் உள்ள மணவாள நகர் கே.என்.சி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிறப்பாக பணியாற்றி வரும் தலைமை ஆசிரி யர் சா.ஞானசேகரனுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அவருக்கு சனிக் கிழமை (மார்ச் 9), திருவள்ளூரில் நடைபெற தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டத்தில் பாராட்டு தெரி விக்கப்பட்டது. முன்னதாக மலை வாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டக் குழு உறுப்பினர் டி.செஞ்சியம்மாள் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் வஜ்ஜிரவேலு நன்றி கூறினார்.