districts

img

வீட்டு மனை பட்டா கேட்டு மரக்காணத்தில் விதொச ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்,அக்.11- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு செவ்வா ய்க்கிழமை அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் சார்பில் இலவச வீட்டு மனை  பட்டா கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் எ.சேகர் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட் டத்தில் மாநிலத் துணைத் தலைவர் ஆ.து.கோதண்டம், மாவட்ட தலைவர் வி.அர்ஜுனன், மாவட்ட செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, சிபிஎம் வட்ட செய லாளர் டி.ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட  நடுக்குப்பம், கந்தாடு, எட்டிக்குளம், கூனிமேடு, அனுமந்தை ஆகிய பகுதி களைச் சேர்ந்த ஏழை,எளிய மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி பேசினர், நிறைவாக  பட்டா கோரும் மனுவை வட்டாட்சி யர் அலுவலகத்தில் கொடுத்தனர். ஆர்ப்பாட் டத்தில் வட்ட செயலாளர் ராஜு, வட்ட  துணைச் செயலாளர் காளிதாஸ்  உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்  எழுப்பினர்.