districts

img

நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை

நாடு முழுவதும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறை தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும், முஸ்லிம், கிறித்துவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை பறிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராயபுரம் பகுதிச் செயலாளர் எஸ்.பவானி தலைமையில் 48ஆவது வட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர்ராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் செல்வானந்தம், அமைப்புசாரா சங்க செயலாளர் டி.வெங்கட், பாப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;