தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மேம்பாலம் கீழ் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஏ.கண்ணதாசன் தலைமை தாங்கினார். திண்டிவனம் நகராட்சி துணைத் தலைவர் ராஜலட்சுமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சே.அறிவழகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் ஏ.ம.சதீஷ்குமார், எஸ்.பார்த்திபன், பாரதிதாசன், சச்சின், சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.