விழுப்புரம்,பிப்.1- விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அரு கில், நகராட்சி திடலில், மாபெரும் புத்தக திருவிழா பிப். 2 அன்று துவங்குகிறது. இந்த புத்தக விற்பனை மற்றும் கண்காட்சி வருகிற 14 ஆம் தேதி வரைக்கும் நடைபெறுகிறது. புத்தக விற்பனைக்கு அமைக்கப்பட்டுள்ள அரங்குகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் மாவட்ட ஆட்சியர் சி.பழனி ஆய்வு செய்தார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) நாராயணன்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கி.ஹரிதாஸ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதர், மகளிர் திட்டம், திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா ஆகியோர் உடனிருந்தனர்.