திருவண்ணாமலை,ஜூலை 20-
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த ஆணா னந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமசாமி. வீட்டு மனை பத்திரம் செய்து தருவதாக கூறி, 4 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார் வேட்டவலம் ஜமீன் என்று கூறிக்கொள்ளும் மகேந்திர பந்தரி.
இவர், வீட்டுமனையும் கொடுக்க வில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லை. பல முறை கேட்டும் முறையாக பதில் இல்லை. இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
இந்த நிலையில், வாங்கிய பணத்தை தராமல் மோசடி செய்த மகேந்திர பந்தரிக்கு ஆதர வாக செயல்படும் மாவட்ட குற்றப் பிரிவு காவல் துறையை கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயி ராம சாமிக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தியும் வேட்டவலம் காவல் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று (ஜூலை 19) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எஸ்.பலராமன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் கண்டன உரை யாற்றினார்.
நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியப்படுத்திய தால் காவல் நிலையம் முன்பு காத்தி ருக்கும் போராட்டத்தை துவக்கி வியாழக்கிழ மையும் (ஜூலை 20) போராட்டத்தை தொடர்ந்தனர்.
இதையடுத்து, வேட்டவலம் ஜமீனி டம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஒருலட்சம் ரூபாய் ரொக்க பணம். மீதமுள்ள பணத்திற்கு 60 நாட்களில் எடுத்துக் கொள்ள காசோலையும் மகேந்திர பந்தரி சார்பில் வழங்கப்பட்டது. இதை யடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்தப் போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன் ப.செல்வன், வேல்மாறன், ஒன்றியச் செய லாளர்கள் எஸ். ராமதாஸ், கே. வாசுகி, திருவண்ணா மலை நகரச் செயலாளர் எம்.பிர கலாதன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் டி.கே.வெங்கடேசன், ஆர். அண்ணாமலை, வழக்கறிஞர் அபி ராமன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அசோகன், பன்னீர்செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்