வேலூர்,ஜன.16- வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது பூங்காக்களுக்கு வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது முடக்கத்தால் வேலூர் மாநகர பகுதி யில் பால், மெடிக்கல் மருத்துவமனைகள் தவிர வேறு எதுவும் திறக்கப்படவில்லை. வேலூர் அண்ணா சாலை, காட்பாடிசாலை, ஆற்காடு சாலை, ஆரணி சாலை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. காட்பாடி காந்திநகர் மற்றும் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, வி.ஐ.டி. சாலை பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மாவட்டத்தின் புறநகர் பகுதியான குடி யாத்தம், பேரணாம்பட்டு, ஒடுகத்தூர், அணைக்கட்டு, கே. வி. குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் ஓடாத தால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க மாநில, மாவட்ட எல்லைகள் உட்பட 100- க்கும் மேற்பட்ட இடங்களில் 600 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வருபவர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. காணும் பொங்கலையொட்டியும் வேலூர் கோட்டை பூங்கா மற்றும் அமிர்தி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. கோட்டை அருகே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து வாகன சோதனை நடத்தினர்.