காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோடை விடுமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மணிமேகலை , வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் இ.மணிகண்டன், மாநில துணைத்தலைவர் லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.