நெல்லிக்குப்பம் நகராட்சி 12 வது வார்டில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் தர்மேந்திரனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி ஆதரவு திரட்டிரார்.
ஆற்காடு 30வது வார்டில் நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.சந்திரனுக்கு வாக்குகள் கோரி மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராஜன் பிரச்சாரம் செய்தார். ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.கிட்டு, பி.ரகுபதி, தாலுக்கா செயலாளர் எஸ்.செல்வம், வட்டக்குழு உறுப்பினர்கள் கோதண்டராமன், கன்னியப்பன் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் நகராட்சி 23 வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜி.யுவராஜ் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டினார்.
வேலூர் மாநகராட்சி 23வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜி.கன்னியப்பனை ஆதரித்து ஆட்டோ பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.நாகேந்திரன், எஸ்.பரசுராமன், இடைக்குழு செயலாளர் கே.பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.